உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் உயிரிழப்பு மக்களே பொறுப்பு

கரூரில் உயிரிழப்பு மக்களே பொறுப்பு

கரூர் மரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், அது குறித்து எதுவும் கருத்து கூறுவது சரியாக இருக்காது. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு ஓரளவுக்கு பொறுப்பு இருந்தாலும், காவல்துறை, சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் பொறுப்பு. ஆனால், மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சரியாக இருந்திருந்தால், கரூரில் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஜாதி வன்மம் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சொல்லி வருகிறார். அப்படியொரு சமூகம் அமைய வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தும். - துரை வைகோ, முதன்மை செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sesh
அக் 22, 2025 10:01

சரியாத்தான் சொல்லியுள்ளார் . இன்றைய தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் இதை போன்ற மக்கள் கூடுமிடம் தக்க பாதுகாப்பு கொடுக்க இயலாத நிலை உள்ளதால் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளவும் இல்லை என்றால் இது போன்றே நிலை தான் .


மணிமுருகன்
அக் 19, 2025 00:12

இனி இவருடைய மாநாட்டிற்கு மக்கள் யாரும் போகக் கூடாது


பாரத புதல்வன்
அக் 18, 2025 21:02

அங்கே சின்ன தத்தி.... இங்கே சின்ன சைக்கோ.... விளங்கிடும் நாடு....


pv, முத்தூர்
அக் 18, 2025 13:23

வைகோ நீக்கப்பட்டபோது தீயிட்டு மாண்டவர்களுக்கும் வைகோ எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டார். அவர்கள் உயிருக்கு அவர்களே பொறுப்பு.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 18, 2025 12:11

கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 42 பேர்களும் கூட்டத்துக்கு போவதற்கு முன்னால் தங்களது உயிர்களை வீட்டிலேயே பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயிரையும் எடுத்துக்கொண்டு உயிருடனேயே கூட்டத்துக்கு சென்றதால்தான் கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது உயிர்களை தொலைத்துவிட்டு பிணமாக வந்தார்கள்.


KOVAIKARAN
அக் 18, 2025 10:44

இந்த துறை வைக்கோ என்ன பல விஷயங்களை சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார். ஒருவேளை கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த ஹாசனின் சேர்க்கை காரணமாக இருக்குமோ?


சாமானியன்
அக் 18, 2025 10:40

சரியான கருத்து. கூட்டங்கட்கு போனதால்தானே உயிரிழப்பு ? சிபிஐ தேவையில்லை. தப்பு செய்தவர்களை இறைவன் பார்த்துக் கொள்வான். மக்களது வரிப்பணமாவது மிஞ்சும்.


panneer selvam
அக் 18, 2025 10:16

Karur people themselves did gate crash so that they could get royal visits to their house and handful compensation . If so , why these people did not do the same with your party or your paymaster meetings ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை