உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயைத் திறந்தால் திமுகவுக்கு பொய்தான்: விடியல் எங்கே ஆவணத்தை ரிலீஸ் செய்து அன்புமணி குற்றச்சாட்டு

வாயைத் திறந்தால் திமுகவுக்கு பொய்தான்: விடியல் எங்கே ஆவணத்தை ரிலீஸ் செய்து அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை; பொய், பொய், வாயைத் திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் திமுக சொல்வது கிடையாது என்று கூறிய பாமக தலைவர் அன்புமணி விடியல் எங்கே என்ற ஆவணத்தை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார்.தி.மு.க வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த 'விடியல் எங்கே' எனும் ஆவணத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது; இந்த ஆவணத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் அனைத்து பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளில் பொய் கிடையாது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் அவர்கள் சொன்னதை தான் வெளியிட்டு இருக்கிறோம்.தமிழகத்தில் எங்கேயும் விடியல் இல்லை என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்துள்ளோம். தமிழகம் இன்று இருண்டு கிடக்கிறது. விடியல் எங்கேயும் இல்லை, அதை இந்த ஆவணம் மூலம் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். மற்ற கட்சிகள் எல்லாம் திமுக பொய் வாக்குறுதிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் நாங்கள் இதை புத்தகம் வடிவில் வெளியிட்டுள்ளோம். ஒரு பொய்யைக் கூட நாங்கள் சொல்லவில்லை. பொய்யை சொன்னது திமுக தான் என்று இந்த ஆவணங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறோம். இதை தமிழக மக்கள் படிக்க வேண்டும்.திமுக மக்களுக்கு கொடுத்தது எல்லாம் ஏமாற்றும்தான். பொய், ஏமாற்றம், பித்தலாட்டம், ஊழல்,நிர்வாக சீர்கேடுகள். பொய், பொய்.. வாயைத் திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது 505 வாக்குறுதிகள், அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் 66. 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.ஆனால் கோயபல்ஸ் பிரசாரம் போன்று 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறி வருகிறது. தமிழக மக்கள் அவ்வளவு ஏமாளிகளா? 505ல் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் நிறைவேற்றியது சதவீத அடிப்படையில் பார்த்தால் 12.94 சதவீதம் தான். மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சியில் அளித்த 12 வாக்குறுதிகளில் 8 நிறைவேற்றப்படவில்லை. மாநில சுயாட்சி தமிழ் என்ற ஒன்றும் மட்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 3வாக்குறுதிகள் அரைகுறை. இந்தியாவில் பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது தேவையே கிடையாது. 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின் எத்தனை ஆயிரம் முதலீடு கொண்டு வந்துள்ளார்? நீட் தேர்வு ரத்து என்று முதல்வரும், துணை முதல்வரும் தெருத்தெருவாக சொன்னார்கள். ஒரு வாரத்தில் ரத்து என்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VSMani
ஆக 26, 2025 17:44

505ல் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் நிறைவேற்றியது சதவீத அடிப்படையில் பார்த்தால் 12.94 சதவீதம் தான். சரிதான். 5 வருடத்தில் 12.94 சதவீதம் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்ற முடியும். முழுவதையும் நிறைவேற்ற இன்னும் 8 முறை திமுகவை ஆட்சியில் வைத்தால் முழுவதையும் நிறைவேற்றிவிடுவார்கள். புதிய வாக்குறுதிகளை சேர்க்காமல் இருந்தால்.


joe
ஆக 26, 2025 16:58

காலம் காலமாக தி மு க தேச துரோக செயல்களுக்கு பேர் போனது .தி மு க வின் அனைத்து சொத்துக்களும் தேச துரோக வழிகளில் கிடைக்கப்பெற்றதே ஆகும் .பொய்களால்தான் தி மு க வின் குடும்ப பெண்களும் ஊழல்களில் திளைக்கிறார்கள் .


சாமானியன்
ஆக 26, 2025 13:39

திமுக பொய்க்கட்சி என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். இருக்கட்டும். பாமக தனித்து நின்று தனது வலிமையை காட்ட 2026 சரியானதா என யோசிக்கனும்.


அப்பாவி
ஆக 26, 2025 13:08

எங்கே எந்த ஒட்டு கேக்கும் கருவிய வெச்சு ஆவணத்தை புடிச்சீங்க?


Kjp
ஆக 26, 2025 13:33

அன்புமணி ஆதாரத்தோடு சொல்லும் குற்றச்சாட்டுக்கு சரியான பதில் உங்களால் சொல்ல முடியுமா முடியாதா?


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:12

அதனை உங்க கட்சி வைத்திருக்காது என்பது எவ்ளவு உண்மை ? ஏற்கனவே பலகுடும்பங்களை கார்பொரேட் ஊடகம் , டாஸ்மாக், கல்வி தந்தைகள் என்று சீரழிக்கும் திருடர் கழகம் இதை பண்ணாமல் இருக்குமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை