வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காவல் துறை அட்டூழியத்தல இதுவும் ஒரு பாகம். CCTV access பாக்கறாங்கனு மக்கள் நினைக்கிறாங்க இவங்கள எதுவும் கேட்டுறக்கூடாது, கேட்டா தனிப்பட்ட முறையில பழி வாங்குறாங்க. மத்தவங்க mobile phones பிடுங்கி password பண்ண சொல்லி அதுல phone account மூலமா bankல எவ்வளவு இருக்குனு check பண்ணி பணம் demand பண்றாங்க. இது எப்ப நீதிபதிங்க கேட்பாங்களோ
எல்லா அழுத்தங்களும் கைப்பேசிகளின் மூலமாக வருகிறதே? என்ன செய்ய?
காவலர்கள் பணி நேரம் வரையறை இல்லாமல் இருப்பதால் அவர்கள் மொபைல் போனில் உள்ளனர். கோர்ட் வேலையாக இருந்தால் 10 முதல் 5 மணி வரை மட்டுமே. அரசியல்வியாதிகள் வந்தால் பந்தோபஸ்து என்று அவர்கள் வருவதற்கு முதல் நாள் முதலே ஆரம்பித்து அவர்கள் போகும் வரை பணி செய்ய வேண்டும் பெரும்பாலான அரசியல் வியாதிகள், வாரிசுகள் அலட்சியமாக பலமணி நேரம் தாமதமாக தான் வருவார்கள், அவர்கள் வந்து போகும் வரை காவலர்கள் கால நேரமில்லாமல் தேவுடு காக்க வேண்டும். இதில் ஊர்வலங்கள், கோவில் திருவிழா, இயேசு அழைக்கும் கூட்டங்கள் என்று பல இடங்களில் விடிய விடிய பணி செய்ய வேண்டும். காவலர்களும் மனிதர்கள் தானே.
சரியாய் சொன்னீர் ,மெட்ரோ நிலையம், போலீஸ் பூத் , பாரா , Patrol எங்கு பார்த்தாலும் போலீஸ் மொபைல் போனில் ..... சுய ஒழுக்கம் வேண்டும் ... உயர் அதிகாரிகள் கண்காணிப்பு வேண்டும் . அல்லது டூட்டி நேரத்தில் ஸ்மார்ட் போன் கூடாது .......
மொபைல் போனின் தாக்கம் மிக அதிகமாகி, அது ஒரு போதை தரும் பொருளாகி விட்ட நிலையில், மக்கள் தன்னை மறந்து, சூழ்நிலை மறந்து, ஆபத்துக்கும் உள்ளாகின்றனர். மிக வேதனை என்னவென்றால், அதன் தாக்கம் குழந்தைகளை, சிறுவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. மொபைல் போன் உபயோகிப்பவர்களுக்கு ஒரு வயது வரம்பு மிக அவசியம். அத்தியாவசிய காவல் துறை போன்ற சில பணிகளில் அவர்கள் பணி நேரத்தில் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என்று உத்திரவு போடவேண்டும். மீறினால், நடவடிக்கை அவசியம்.
பிரச்னை வரும் என்று அரசியல்வாதிகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நீதிமான்கள் வழக்குகளில் இருந்து விலகுவது மட்டும் சரியா ????