| ADDED : மார் 27, 2024 12:06 PM
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் பா.ம,க., நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் பா.ம.க., 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.வாக்குறுதிகள் என்னென்ன?
* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gq9vabvq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு.* மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* காவிரி- கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை.* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். * என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை.* தனியார் துறை நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும். * தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழகத்தை உருவாக்குவோம்.* 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை' என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.* தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும்.* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.