உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாசும், அன்புமணியும் மியூசிக்கல் சேர்!

ராமதாசும், அன்புமணியும் மியூசிக்கல் சேர்!

சென்னை : அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் அன்புமணிக்கு போட்டியாக, அவரது தந்தை ராமதாசும் களமிறங்கி இருக்கிறார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்கும் விஷயத்தில், மகனை முந்திக் கொள்ளும் முடிவோடு, காய் நகர்த்தலை அவர் துவங்கி இருப்பதாகவும் தெரிகிறது. கடந்த 2024 டிசம்பர் 28ல், புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அப்பா --- மகன் இடையே ஏற்பட்ட பகிரங்க மோதல், ஆறு மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=frsdmjcv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஏப்ரல் 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். அதை ஏற்க மறுத்த அன்புமணி, 'பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நானே தலைவர்' எனக்கூறி, தன் ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.

முடியவில்லை

இருவரையும் சமாதானப்படுத்த, பா.ஜ.,வுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட பலர் முயன்றும் முடியவில்லை. 'தலைமை பதவிக்கு தகுதியில்லாதவர்; தாய் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்க முயன்றார்; கூசாமல் பொய் பேசுபவர்' என, அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கினார். அதோடு விடாமல், 'அன்புமணியின் பெயருக்கு பின்னால், தன் பெயரை பயன்படுத்தக் கூடாது' என்ற தடையை விதித்து, பா.ம.க.,வினரை அதிர வைத்துள்ளார் ராமதாஸ்.https://www.youtube.com/embed/tc3SeB9LNd8ஐந்து பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர் அன்புமணி பக்கமும், இருவர் ராமதாஸ் பக்கமும் நிற்கின்றனர். இரு தரப்பினரும், சபாநாயகரிடம் தனித்தனி கடிதம் கொடுத்ததால், சட்டசபையில் பா.ம.க., இரண்டாக உடைந்துள்ளது. மாநில நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்; பொதுக்குழுவை கூட்டவும் ஏற்பாடு செய்து வருகிறார்.அதை முறியடிக்க, வரும் 25ம் தேதி முதல், 100 நாட்களுக்கு அன்புமணி நடைபயணம் செல்ல இருக்கிறார். அத்துடன், பா.ஜ., கூட்டணியில் இணைய விரும்பும் அன்புமணி, அக்கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இதற்காக, சில நாட்கள் டில்லியில் முகாமிட்டிருந்தார். பா.ஜ., தலைவர்களின் கவனத்தை ஈர்க்க, 'பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களுக்கு, தி.மு.க.,வே காரணம்' என்று குற்றஞ்சாட்டிய அன்புமணி, தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆதரவு கருத்து

அதற்கேற்ப, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத் தலைவர் ராமசுகந்தன் ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர். வி.சி., தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் ரவிகுமார் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்களும், ராமதாசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், தி.மு.க., வுடன் ராமதாஸ் கூட்டணி பேசி வருவதாக தகவல் வெளியானது.பா.ஜ., தலைமையிடம் அன்புமணி நெருங்குவதை உணர்ந்த ராமதாஸ், இப்போது தன் வியூகத்தை மாற்றிக் கொண்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:அன்புமணியிடம் பா.ம.க., சென்று விடக்கூடாது என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். பா.ஜ., வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் அவர் இணைந்து விட்டால், மத்திய அரசின் அதிகார பலம் வாயிலாக, அன்புமணியிடம் பா.ம.க., பெயர், கொடி, சின்னம் சென்று விடும் வாய்ப்பு இருப்பதாகவும் ராமதாஸ் நினைக்கிறார்.

நம்பிக்கை

எனவே, அன்புமணியின் திட்டத்தை முறியடிக்க, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறார். 'அன்புமணியால் தி.மு.க., கூட்டணிக்கு செல்ல முடியாது; அவர்களும் ஏற்க மாட்டார்கள். 'எனவே, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் தான் இணைந்து விட்டால், மகனை வழிக்கு கொண்டு வந்து விடலாம்' என ராமதாஸ் நினைக்கிறார்; அதற்கேற்ப காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளார். அதனால் தான், 'பிரதமர் மோடி என் நண்பர்' என, ராமதாஸ் அடிக்கடி கூறத் துவங்கியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆனாலும், 2024 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு கைகொடுத்த தன்னை, டில்லி மேலிடம் கைவிடாது என்ற நம்பிக்கையில் அன்புமணி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 15, 2025 08:46

கடேசி பத்தி அதுதாங்க... bj கட்சி தன்னை கைவிடாது என்று அன்புமணி புளிமூட்டை .. வன்னியர் சங்க சி என் ராமமூர்த்தி மொழியில் நினைக்கிறார் .....அதை நினைச்சா தான் பரிதாபமா இருக்கு ... சிரிப்பாகவும் இருக்கு .... இப்பேற்பட்ட அறிவிலியா இந்த அரசியல் சீட்டில் டாக்டரான அன்புமணி ?? நாட்டில் அதுவும் தமிழநாட்டில் ஒரு ஆக பெரிய மிச்சரை உருவாக்கி அதுதாங்க ஓபிஎஸ் அதில் குளிர்காய்ந்துவிட்டு அப்புறம் இன்னொரு மிச்சரையும் உருவாக்க முயற்சித்து அதுதாங்க செங்கோட்டையன் ... இப்படிப்பட்ட கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்தும் ஒருகட்சியிடம் நம்பிக்கை வைப்பவர்களை எப்படி நினைப்பது ??? மாநிலத்துக்கு மாநிலம் இப்படிப்பட்ட மிச்சர்களை உருவாக்குவதை மட்டுமே கட்சி வளர்க்கும் சீரிய பணி என்று செயலாற்றிவரும் கட்சியிடம் யாரவது நம்பிக்கை வைப்பார்களா ??? மக்கள் நம்புவது வேறு மிகுந்த பயத்தை கொடுக்குது


.
ஜூலை 15, 2025 09:06

ஏலே சிகண்டி ஏன் ஏழு பக்க இந்த அறுவை கருத்தை போட்டு எங்கள இம்சிக்கிற ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 15, 2025 08:36

அந்த கட்சியில் கபடி ஆட்டம் நடப்பது நம்ம bj கட்சி சித்து விளையாட்டினால் மட்டும் தான் என்பது உண்மை தான் என்பது இங்கு தலைப்பு செய்தியாக வரும்போதே தெள்ளத்தெளிவாகுது ...நடத்துங்க .... நடத்துங்க .... நல்லா நடத்துங்க .... karma is a .......அதை மட்டும் தெளிவா தெரிஞ்சிக்கோங்க


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 15, 2025 08:32

தந்தை மகனுக்குமான சண்டைக்கான காரணத்தை கார்ட்டூன் வடிவில் வெளியிட்டு வாசகர்களுக்கு உங்களுக்கே உரிய நாரதபாணியில் தகவலை கொண்டு சேர்த்ததற்கு நன்றி .... இப்போது தலைப்பு செய்தியாக வெளியிட்டு அவர்கள் சண்டையில் மகிழ்ச்சிகாணும் நல்லுள்ளங்களுக்கு தீனி போட்டமைக்கும் நன்றி ...வாழ்க தங்கள் தொண்டு ... வளர்க இத்தகைய சீர்மிகு நற்பணி உங்கள் நற்பணி அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறான் .. உங்களுக்கு ரொம்போ ரொம்போ நல்லது மட்டும் தான் செய்வான் ....ராமபிரானும் நமச்சிவாயனும் சக்தி மிக்கவர்கள் ...நல்லவர்களை கைவிடவே மாட்டார்கள் ....தீயவர்களையும் விடவே மாட்டார்கள் ... .ஏனெனில் இருவரும் உண்மையின் உறை கற்கள் ... நடுநிலை தெய்வங்கள் சரி தானே நான் உரைப்பது ??என்ன ... நமக்கும் தீமைக்கும் நானே காரணம் என்றும் சொல்வார்கள் ....அது மட்டும் தான் கொஞ்சம் உதைக்குது .....தீமையை எதற்கு வளரவிடுகிறார்கள் ?? தீமையை பலம்மிக்கதாக எதற்கு படைக்கிறார்கள் ?? தீமை செய்பவர்கள் நாரதபாணி உட்பட எல்லாவிதமான சந்தோஷங்களையும் அனுபவித்துவிட்டு கடேசில தான் சாகிறார்கள் ... நல்லவர்கள் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு தான் சாகிறார்கள் ...தீயவர்களின் சந்ததியினரும் தீமையால் சம்பாதித்த பணத்தை வைத்து ரொம்போ ஆட்டம் போடுகிறார்கள் ....நல்லவர்கள் பணமும் சம்மதிக்காமல் அவர்களின் சந்ததியினரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு செல்கிறார்கள் .....


.
ஜூலை 15, 2025 09:12

நீ ஏன் இப்படி வரிஞ்சு கட்டி வார்த்தையில் பொங்குற?


kr
ஜூலை 15, 2025 06:42

Looks like we have atleast 3 new parties. PMK Ayya and PMK Chinna Ayya are 2 parties. MDMK original drohies and MDMK new Drohies. ADMK OPS with whatever ADMK sounding name. Similar to Maharashtra political happenings in the recent past, where regional parties cleverly split and joined two main fronts. They will be in power whichever front wins


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 15, 2025 09:35

All in the name of politics and சாணக்யத்தனம்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 15, 2025 19:23

அண்ணா டீம்கா, அமித்சா டீம்கான்னு ரண்டு அடீம்கா.


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 06:25

பெட்டிகளை அதிகம் வாங்கதான் அப்பா மவன் சண்டையா, புரிந்து விட்டது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 15, 2025 04:37

அய்யா ராமதாஸ் அவர்களே , தொண்டர்களிடமும் கேட்டு நடங்க ,


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 03:47

மருத்துவர் கோஷ்டி உள்ளடி சண்டை மூலம் தீம்காவுக்கு நூல் விட்டு ஆதாயம் தேடலாம் என்று நினைத்தவுடன் தீம்க்கா கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது [சொல்லி மட்டுமே] - அதனால் சுவற்றில் அடித்த பந்து போல இருவரும் திரும்ப வருகிறார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 01:39

ராமதாஸ் திமுகவிடம் சென்றால், திருமா ஓடிவிடுவார் என்று ஸ்டாலின் சேர்க்கமாட்டார். ராமதாஸ் எடப்பாடியிடம் பேசி என்ன பயன்? கூட்டணி முடிவுகளை அமித் ஷா மட்டும் தான் எடுப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை