உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Narayanan
மே 23, 2024 13:59

காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்துவரை நிர்ணயம் செய்து இடைவேளை இல்லை என்று வைக்கலாம் என்னதான் செய்தாலும் பட்டுகோட்டையார் சொல்றமாதிரி காவலர் வேஷம் போட்டால் திருடர்கள் வேறு உருவில் திருடுவார்கள் இதுஎல்லாம் மாறவேண்டும் என்றால் சாதீய கோட்டா போகணும் , தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்


ram
மே 23, 2024 10:48

சென்னையில் பாதி ரேஷன் கடைகளில் அரிசி paalmoil தருவது இல்லை, அதை வெளி கடைக்கார்களிடம் வித்து விடுகிறார்கள் இந்த ஓசி அரிசி தருவதற்கு எதாவது காலக்கெடு விதிக்கவேண்டும்


Suriyanarayanan
மே 23, 2024 08:36

உடனடியாக அரசு செய்ய வேண்டியது அனைத்து ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா வைத்து சென்ரலைஸ்டு வார் ருமில் ஒவ்வொரு நிமிடமும் கவனிக்க வேண்டும் டிகிரி கேமரா வைக்க வேண்டும்


gopalakrishna kadni
மே 23, 2024 08:00

ஒரு பழைய பாடல் ஞாபகம் வந்தது... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.... இது இப்ப பொருந்துமா.... சொல்லுங்கண்ணே


R.RAMACHANDRAN
மே 23, 2024 07:02

கைரேகை சரியாக இருந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க முடிகிறது அப்படி இருக்க சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டும் கடத்த முடிகிறது மொத்த விநியோகத்தில் கூட்டு கொள்ளை அடித்து ரேஷன் கடைகளுக்கு எடை போடாமல் இறக்கி எடை போட்டு இறக்கியதாக போலி ஆர்வங்கள் தயாரித்து சதவிகித அளவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறது இதனை மறைக்க அப்பாவிகள் மீது பழி சுமத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடுகின்றனர் இந்நாட்டில்


Siva
மே 23, 2024 05:18

இது எல்லாம் வல்ல இறைவன் செயல்


kannan sundaresan
மே 23, 2024 04:49

செய்தியை வாசிப்பவர், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 23, 2024 05:57

நண்பகல் என்பதற்கு பதிலாக செய்தி வாசிப்பில் நள்ளிரவு என்று வருகிறது AI தொழில் நுட்பம் PM என்பதை இரவு நேரம் என் எடுத்து கொண்டதோ


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி