வாசகர்கள் கருத்துகள் ( 1 )
S Sivakumar
அக் 01, 2025 08:00
இதை களத்தில் இறங்கி உண்மை என ஆராய்ந்து அங்கே இருந்த படியே பேசினால் அதன் பிறகு அரசியல் வேலை செய்யாது
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை, அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். ஆனால், அங்கு விவசாயிகள், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நெல் மூட்டைகளை உடனுக்குடன் எடை போடாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைகின்றன. அதன்பின், ஈரப்பதத்தை காரணம் காட்டி குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். ஒரு மூட்டை நெல்லுக்கு, 40 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்; இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். -- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
இதை களத்தில் இறங்கி உண்மை என ஆராய்ந்து அங்கே இருந்த படியே பேசினால் அதன் பிறகு அரசியல் வேலை செய்யாது