உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய கார்டுதாரர்கள் அனைவருக்கும், தலா, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.நான்கு லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் உட்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என, 24 லட்சம் கார்டுதாரருக்கு பரிசு தொகுப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=99h0j266&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை துவக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை(ஜன.,10) காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
ஜன 09, 2024 20:17

குழப்பவாகிதிகள் நிறைந்த விடியல் அரசாங்கம்


SLN
ஜன 09, 2024 17:30

பொருளில்லா கார்டு தெரியாமல் வாங்கியது. தற்போது மாற்ற முடியாது. G. O. இல்லையாம்


rasaa
ஜன 09, 2024 17:07

மிக மிக தவறான தகவல். இதுவரை பயனடைந்தவர்கள் பெரும்பான்மையோருக்கு தற்சமயம் இல்லை என்பதே உண்மை.


Prabakaran J
ஜன 09, 2024 16:37

Finally proved - TASMAC Govt


duruvasar
ஜன 09, 2024 16:03

கலப்படமில்லாத அக்மார்க் பொய், இதற்கும் தகுதி வாய்ந்தோர் பட்டியல் இருக்கிறதாம்.


Kanakala Subbudu
ஜன 09, 2024 15:55

மீண்டும் குழப்பம். ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்கள் பாடு திண்டாட்டம். அறிவிப்பு செய்வதற்கு முன் தீர யோசித்து செய்திருந்தால் இந்த குழப்பத்தை தவிர்த்து இருக்கலாம்


SIVAN
ஜன 09, 2024 15:35

எல்லா தமிழர்களும் பொங்கல் முதல் வறுமை கோட்டிற்கு கீழ் வந்து விடுவார்கள். அரசு சொல்லும் ஏழைகளோடு பணக்காரர்களும் போட்டி போடுவார்கள், அவர்களிடம் பிடுங்கி தின்பார்கள். நம் மக்களையும் சொல்ல வேண்டும், கழுத்து நிறைய தங்க நகை அணிதிருப்பார்கள், ஆனால் வரிசையில் நின்று டோக்கன் வாங்குவார்கள், வெட்கம் கெட்டவர்கள்.


vadivelu
ஜன 09, 2024 14:30

Indin economy is very strong.TN is fund rich.


மதன்
ஜன 09, 2024 14:27

அனைத்து காடுகளுக்கு இல்லை, இது பொய்யான தகவல்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை