உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையில், அமலாக்கத் துறைக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன், மனுதாரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திரும்ப ஒப்படைக்கும்படியும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பாக, மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுக்களில், 'அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குப் பின், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த, 'ஹார்டுடிஸ்க்' உள்ளிட்ட பொருட்களை திரும்ப வழங்க வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அலுவலகம், வீடுகளுக்கு வைக்கப்பட்ட, 'சீல்' அகற்றப்பட வேண்டும்' என்று கோரிஇருந்தனர்.இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. விக்ரம் ரவீந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி, அபுடுகுமார்; ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் கே.எம்.காளிசரண் ஆகியோர் ஆஜராகினர்.விசாரணையின்போது, டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அதை பார்வையிட்ட நீதிபதிகள், 'சோதனையின் முடிவில் ஒரு சொத்தை சீல் வைக்க, அமலாக்கத் துறைக்கு எந்த சட்ட விதி அனுமதித்தது?' என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு, 'பி.எம்.எல்.ஏ., என்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்பிரிவு 17-ன்படி, சொத்துக்களுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை' என்று அமலாக்கத் துறை பதிலளித்தது. மேலும், அனுமதியின்றி வீட்டினுள் நுழைய வேண்டாம் என ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்ப பெறுவதாகவும், பறிமுதல் செய்த மின்னணு சாதனங்கள் உட்பட அனைத்தையும் மனுதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கூறியது. இந்த வழக்கில் நேற்று, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்களுக்குஎதிராக, அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை முற்றிலும் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல. ஏனெனில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், மனுதாரர்கள் பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நம்புவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் எந்த அதிகாரமும் இல்லை. எனவே, மனுதாரர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மே 16ல் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை, ஜூலை 16க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அமலாக்கத்துறைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் போகிறது ஈ.டி.,

உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவை தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, ''இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, மூன்று வாரங்களுக்கு உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்று கோரினார்.அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சிறப்பு பிளீடர் ஜோஹப் ஹூசைன் ஆஜராகி, ''மனுதாரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு பொருட்களில், ஒரு சில தகவல்கள் எடுக்கப்படவில்லை என்பதால், அவற்றை, 'காப்பி' செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'அவ்வாறு அனுமதிப்பது, இந்த இடைக்கால உத்தரவை நீர்த்துப் போகச் செய்வதாகக் கருதப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Mahendran Puru
ஜூன் 24, 2025 08:28

அமலாக்கத்துறைக்கு பின்னடைவு என்றால் இந்திய ஜனநாயகத்திற்கு முன்னடைவே. சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் அரசியல் எதிரிகள், கட்சிக்கு நமக்கொடை கொடுக்காதவர்கள் மேல் ஏவிவிடப்படும் வளர்ப்பு பிராணியே ஆமலாக்கத்துறை. இன்றுவரை எந்த வழக்கிலும் யாருக்கும் தணடனை வாங்கி கொடுக்கவில்லை. நேர்மையானவர்கள் என்றால் எத்தனை பாஜக மந்திரியை விசாரித்தார்கள் என்று சொல்லட்டும். பேட்டி பெட்டியாய் பணம் கொடுத்து எதனை மாநிலங்களில் எம் எல் ஏ க்களை வாங்கினார்கல், அவர்கள் மேல் என்ன நடவடிக்கை?


Poornaiya Radhakrishnan
ஜூன் 22, 2025 14:50

அருமையான தீர்ப்பு.டெல்லி வர்மா இங்கேயும் இருக்கிறார்.


தாமரை மலர்கிறது
ஜூன் 22, 2025 00:10

ஜி ஆர் ஸ்வாமிநாதனிடம் இந்த வழக்கை திரும்ப அமலாக்கத்துறை எடுத்து சென்றால், நல்ல தீர்ப்பை அவர் கொடுப்பார்.


KRISHNAN R
ஜூன் 21, 2025 20:19

,,, இந்திய முன்னணி பத்து வழக்கறிஞர்கள்.... வாதாடினால்..... உங்களுக்கு வெற்றி கிடைக்கும்


krishna
ஜூன் 21, 2025 15:33

ILANJAR ANI OOPIS ANI MAGALIR ANI VAKKIL ANI ENA DRAVIDA MODEL KUMBALIL IRUPPADHU THERIUM.IPPODHU NEEDHIBADHIGAL ANI ULLADHU KAALATHIN KODUMAI.


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 15:14

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை விட தங்களை மேலான அதிகாரம் உடையவர்களாக நீதித்துறை காண்பிக்க நினைத்தால் நாடு அழிவையே சந்திக்கும். தாங்களும் சாமான்ய மக்களை காப்பாற்ற ம‌ட்டுமே உழைக்கிறோம் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால் நீதிபதி வர்மா விவகாரத்தில் நடந்து கொண்டதே நன்னம்பிக்கையை கடுமையாக குறைத்துவிட்டது. .


SIVA
ஜூன் 21, 2025 14:55

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை வெளி நாடுகாரன் முதல் நிறைய நபர்கள் வீடியோ எடுத்து யூடூப்பில் போட்டு விட்டார்கள் , இது விஷயமாக ஒரு கேஸ் கூட கடத்த நான்கு ஆண்டுகளில் விடியல் அரசு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை , வழக்கு பதிவு செய்ய வில்லை , மினிமம் இதில் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் பத்து ரூபாய் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது , இது விடியல் அரசுக்கும் தெரியாது , நீதி மன்றத்திற்கும் தெரியாது ......


Kudandhaiyaar
ஜூன் 21, 2025 18:55

குடிப்பவர்கள் கொடுக்கிறார்கள் மற்றவர்களுக்கு என்ன கவலை. நீதி மன்றம் கருப்பு அங்கி அணிந்திருப்பதால் அவர்கள் என்றும் தி மு க வின் நிரந்தர அடிப்படை உறுப்பினர்கள். ஆகவே அவரகள் இருக்கும்வரை ஒருவரை கூட அமலாக்க துறையால் எதுவும் செய்ய முடியாது. தி மு க நினைத்தால் அமலாக்க துறையை நீக்க நீதி மன்றம் மூலம் உத்திரவு இடும் பலம் இருக்கிறது. அமலாக்க துறை தன் இயலாமையை உணர்ந்து துறையை மூடி விடுவது அனைவரின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க உதவும்


மொட்டை தாசன்...
ஜூன் 21, 2025 13:17

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அமலாக்க துறைக்கு எதிராகத்தான் தீர்ப்புவரும் .


மோகன்
ஜூன் 21, 2025 13:06

Our law tem a failed one. Failed law state. Sometimes it makes us to think that the courts and judges are influenced by the corrupt DMK government.


Balaji Radhakrishnan
ஜூன் 21, 2025 12:37

Our laws are wasted.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை