உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை வழங்குவது போன்ற விவகாரத்தில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய, மாநில அரசு பரிந்துரை செய்தும், அந்த கோரிக்கைகளை, கவர்னர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன' என, வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி, எம்.முகமது சைபுல்லா, எஸ்.மனோகரன் மற்றும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆகியோர் நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினர். அப்போது, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து, கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கொலை குற்றவாளி வீரபாரதி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, 'கடந்தாண்டு அக்., 17ல், முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்த பின், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கைதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது; இந்த விஷயத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது; அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது. மற்றொரு கொலை குற்றவாளி முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவுக்கு மாறாக, உரிய பிரிவுகளில் வழக்கு தொடரப்படாததை சுட்டிக்காட்டி, 'அமைச்சரவை பரிந்துரைத்தும், முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த கவர்னரின் உத்தரவு செல்லும்' என, கடந்தாண்டு நவ., 6ல் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த இரு அமர்வுகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக இந்த வழக்குகளையும், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு அனுப்பி வைக்க, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக கவர்னர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும், மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்ய வேண்டும் என, தங்கள் உத்தரவில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Muthukumaran
செப் 08, 2025 00:47

சட்டத்தின் ஆட்சி என்பது இதுதான். கவர்னருக்கு சட்ட ஆலோசகர்காள் இருந்தும் நீதிமன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றால் இது சட்டத்தின் ஆட்சியே.


Radhakrishnan
செப் 07, 2025 20:50

நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது எப்படி ஒவ்வொரு நீதிபதிக்கும் தனி சட்டமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 07, 2025 18:38

அரசியல் காரணங்களால் சிறையில் இருப்பவர்கள் மற்றும் ஒருவருக்கு வழங்கிய தண்டனை இனி தேவையில்லை அல்லது தவறான தீர்ப்பினால் தண்டனை வழங்கப்பட்டது என்று ஒரு நீதிமன்றம் முடிவெடுத்தால் மட்டுமே எவரையும் விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதியை தவிர வேறு எந்த மையங்களாலும் எவரையும் எப்போதும் எந்தக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க முடியாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.


theruvasagan
செப் 07, 2025 17:39

ஒரு நீதிமன்றத்துக்குள்ளேயே ஒவ்வொரு நீதிபதியாலும் ஒரே சட்டம் ஒவ்வொரு விதமாக பார்க்கப்படுகிறது. சட்டப்படி எது சரி எது சரியில்லை என்கிற முடிவு சட்ட புத்தகத்தின் வார்த்தைகளில் இல்லை. அந்த வார்த்தைகளுக்கு அவரவர் சிந்தனைக்கேற்ப அவரவர் புரிதலுக்கேற்ப அர்த்தம் சொல்லுவதில்தான் பொதிந்துள்ளது என்றால் சட்டத்தின் மாட்சிமை என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது என்றே கருதவேண்டி உள்ளது.


venugopal s
செப் 07, 2025 16:52

ஆளுநர் மந்திரிசபை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே சரியாகும். ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கலாம் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே தேவையில்லை என்று ஆகிவிடும்!


R K Raman
செப் 07, 2025 16:29

நீதி மன்றம் வழங்கும் தண்டனையை ரத்து செய்ய உள்ள அதிகாரங்கள் முற்றிலும் நீக்கப் பட வேண்டும்


Sridhar
செப் 07, 2025 15:28

இந்த ஆட்சியில இருக்கிறவரை ஒவ்வொரு தீர்மானத்தையும் கவர்னர் குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். குற்றவாளிகளை விடுவிச்சு அவனுகளோட கூத்தடிப்பாணுங்களாம் அதுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுக்கணுமாம்


NAGARAJAN
செப் 07, 2025 12:30

நிச்சயமாக கட்டுப்பட தான் வேண்டும். . மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு ஜனாதிபதி கட்டுப்படுவது போல. .


T.sthivinayagam
செப் 07, 2025 12:22

வழக்குகள் நீதிமன்றம் சென்ற காலம் மாறி நீதிபதிகளை நாடி செல்கின்றன சில நீதிபதிகளோ சமுதாயம் மறந்து சமுகம் அரசியல் சார்ந்து செல்கிறார்கள் ராமராஜ்யம் எங்கே செல்கிறது.நீதி தவறிய சாம்ராஜ்யங்கள் அழிவையே சந்தியுள்ளன.


panneer selvam
செப் 07, 2025 12:16

I agree if council of ministers could decide the release of the criminal , then what will be the status of the judgement under which the culprit was punished . It is simply ridiculous


Rajan A
செப் 07, 2025 12:53

சூப்பர். அதேபோல் மாடல் அரசே நீதிமன்றம் ஆகலாம். குற்றம் செய்வதற்கு முன்னால் இதெல்லாம் குற்றம் இல்லனு சொல்லிடலாம்.


சமீபத்திய செய்தி