உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாஜி எம்.எல்.ஏ., விவகாரத்தில் சபாநாயகர் விரைவில் முடிவு

 மாஜி எம்.எல்.ஏ., விவகாரத்தில் சபாநாயகர் விரைவில் முடிவு

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு தாவிய இசக்கி சுப்பையா, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்தார். அது குறித்து, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின் முடிவு அறிவிப்பதாக, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார். சபாநாயகர் நேற்று அளித்த பேட்டி: சபாநாயகராக நான் சிறப்பாக செயல்படுகிறேன் என்றால், இந்த பொறுப்பில் என்னை அமர வைத்த முதல்வருக்கு தான், அந்த பெருமை சேரும். அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்போது, அதை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை வழங்கினார். அந்த கடிதம், எனது ஆய்வில் உள்ளது. சட்டசபை முடிந்த பின் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kavi Priyan Adelaide
செப் 05, 2026 12:19

ஒருவேளை ராஜினாமாவுக்காக பெற்ற பணத்தை திரும்ப பெற்ற பிறகு இதற்கு ஒரு முடிவு வருமோ..??


duruvasar
செப் 05, 2026 11:29

சபாநாயகர் அவையில் கொடுத்த ராஜினாமா கடித்தை உடனடியாக பெற்றுக்கொண்டு தலைமை செயலகத்தில்s கணநேரத்தில் தவெக உறுப்பினர் அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்துக்கொண்டு சுசுறுப்பை காட்டிய திருச்சபை தலைவருக்கு தகுதி நீல முடிவுக்கு 130 நாட்கள் கடந்தும் ஆலோசிச்சுகிட்டே இருபது ஏன் ?


vel
செப் 05, 2026 09:14

தேர்தல் கமிஷன் தொகுதி காலி என அறிவித்த பின்னர் அவர் தான் ராஜினமா கடிதத்தை வாபஸ் பெறுகிறேன் என சொன்னால் அதை பரிசிலிக்க ஏற்று கொள்வதே முதலில் தவறு .


Lakshminarasimhan
செப் 05, 2026 07:31

இவர் முடிவு ராஜினாமாவை வாபஸ் பெற்றால் ஜனநாயக விரோத செயல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை