உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஐ.டி., சேர்க்கையில் விளையாட்டு துறை ஒதுக்கீடு

ஐ.ஐ.டி., சேர்க்கையில் விளையாட்டு துறை ஒதுக்கீடு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நேற்று பேசியதாவது:உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதில், 70 சதவீதம் இளைஞர்கள் கிராமங்களில் உள்ளனர். கிராம இளைஞர்களின் பயன்படுத்தப்படாத அறிவாற்றல், முறையாக பயன்படுத்தப்படும் போது, அனைவரையும் உள்ளடக்கிய தேச வளர்ச்சிக்கு வழி வகுக்கும். வரும் கல்வியாண்டு முதல் சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கையின் போது, விளையாட்டு துறையில் மாணவர்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, விளையாட்டு துறைக்கு பிரத்யேக இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி