உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்

ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்

சென்னை: தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட்டும், 24 மணி நேரத்துக்கு, 1,000 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது. தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட் என்றளவில் உள்ளது. அனல் மின் நிலையங்களில் இருந்து சராசரியாக, 3,000 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 1,000 மெகா வாட், எரிவாயு மின் நிலையங்களில், 150 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால், மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட் மின்சாரம் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு தினமும், 24 மணி நேரம், 1,000 மெகா வாட் மின்சாரம் தமிழக நிறுவனங்களிடம் வாங்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. காலை 6:00 முதல், 10:00 மணி வரையும், மாலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரையும் உச்ச நேரம் எனப்படுகிறது. உச்சநேர மின்சார விலை அதிகம். இதனால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 8 ரூபாய் விலை வைத்தால் கூட ஒரு நாளைக்கு, 3.20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக, 3,500 கோடி ரூபாய் செலவாகும். ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 மெகா வாட் வாங்குவதால், 21,600 கோடி ரூபாய் செலவாகும். ஒட்டுமொத்தமாக, 25,100 கோடி ரூபாய்க்கு செலவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 08:43

எப்படியும் அணில் கணக்குல ஆயிரம் கோடியை ஆட்டயப்போட அருமையான வாய்ப்பு


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 08:34

அடுத்து வேறு ஆட்சி அமைந்தால் மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் .அப்போது இதே சார் கட்சிக்காரர்கள் மின்கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் செய்வார்கள்


c.mohanraj raj
நவ 12, 2025 08:29

total waste of DVD model


duruvasar
நவ 12, 2025 07:44

× 20 % என்று வைத்துக்கொண்டால் கூட பொரி கடலை செலவுக்கு கூட காணாது


Svs Yaadum oore
நவ 12, 2025 07:05

சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்யனுமாம் ...மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....அனல் மின் நிலைய உற்பத்தி செலவு ஒரு யூனிட் 6 ரூபாய்தான் ..ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப் படவில்லை... இதற்கு காரணம் யார் ??.....வருமானத்தில் 62% சதம் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப் பட்டிருக்கிறது.. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...


Vasan
நவ 12, 2025 06:48

தமிழகத்தில், அடுத்த 5 ஆண்டுகளில், மின் தேவை ராக்கெட் வேகத்தில் உயரும். ஏனெனில், பல தொழில் நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டிற்க்குக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூடுதல் தேவையை சமாளிக்க, இது போன்ற மின்சார கொள்முதல், அந்த தேவை வரும் முன்னராகவே, திட்டமிட்டு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும். அந்த வகையில் தமிழக மின்சார வாரியத்திற்கும், தமிழக அரசிற்கும் வாழ்த்துக்கள். சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வாழ்த்துக்கள்.


Svs Yaadum oore
நவ 12, 2025 06:44

மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....தமிழ்நாட்டின் மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4,320 மெகாவாட் மட்டும்தான். அதிலும் 2,619 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி . தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2,100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை...இதற்கு காரணம் யார் ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ...


Svs Yaadum oore
நவ 12, 2025 06:39

மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை. 2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...


Thravisham
நவ 12, 2025 06:28

திருட்டு த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் பற்றிய அறிவு பூஜ்யம். நிதி நிர்வாகம் சுத்தம். ஊழல்/கொள்ளை/மக்கள் வரி பணத்தை ஆட்டைய போடுவது போன்றவற்றில் பிஎச்டி வாங்கியவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை