உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்க பி.எச்.டி., அவரு எல்.கே.ஜி: திருமாவளவனை சொல்கிறார் அன்புமணி

நாங்க பி.எச்.டி., அவரு எல்.கே.ஜி: திருமாவளவனை சொல்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி., படித்துள்ளோம். ஆனால் இப்போது தான் திருமாவளவன் எல்.கே.ஜி., வந்துள்ளார்,'' என பா.ம.க., அன்புமணி தெரிவித்தார்.மதுரை விமானநிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: முதல்வரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம். மேடைக்கு மேடை மதுவின் தீமைகளை பேசிய கனிமொழி 3 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார். போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார். இது எல்லாம் இருக்கிறது அவருக்கு தெரியுமா? அல்லது புரியுமா?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=im1bied9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பூரண மதுவிலக்கு

மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் நான்கு முதல் ஐந்து நாட்களில், ரூ. 30 ஆயிரம் கோடி, ரூ. 50 ஆயிரம் கோடி என முதலீடு ஈர்த்து வருகின்றனர். மதுக்கடைகளை உடனடியாக மூடினால், தமிழகத்தின் சூழல் மோசமாகிவிடும் என அமைச்சர் கூறுகிறார். மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருக்கிறார். தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையை உருவாக்கியதே திராவிட மாடல். இது மிகவும் மோசமான சூழல், இதனை கண்டிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில், முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்தாக பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று சொன்னார் ஸ்டாலின்.

போதை பொருள்

இன்று ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். உடனடியாக மதுவிலக்கு கொள்கை அமல்படுத்துங்கள். காலக்கெடு கொடுத்து மதுக்கடைகளை மூடுங்கள்; இளைஞர்களை காப்பாற்றுங்கள். மதுவை விட மோசமான சூழல் போதை பொருட்கள். போதைப்பொருட்கள் எங்கே பார்த்தாலும் கிடைக்கிறது.கூல் லிப் போன்ற போதை பொருளை ஏன் தடை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கேட்டுள்ளார். போதைப்பொருள் பள்ளிக்கூடம் அருகில் கிடைக்கிறது. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கூல் லிப் பயன்படுத்துகின்றனர். இது எல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? போலீசார் எதற்கு இருக்கிறார்கள்? போலீசாருக்கு தெரியாமல் எதையும் விற்க முடியாது.

அவரு எல்.கே.ஜி!

பா.ம.க., சமூக நீதிக்காக துவங்கப்பட்ட கட்சி. மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.க.,வை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார். மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி., படித்துள்ளோம். ஆனால் இப்போது தான் திருமாவளவன் எல்.கே.ஜி., வந்துள்ளார். அவர் தற்போது தான் மது ஒழிப்பு போராட்டம் நடத்த வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mani . V
செப் 16, 2024 06:16

நான் சொல்லல, சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு.


ramesh
செப் 15, 2024 17:29

இங்கே பெயரே பல்டியாக இருக்கிறதே


T.sthivinayagam
செப் 15, 2024 14:21

சார் உங்க கூட்டனி கட்சிபாஜக கூட்டனி ஆட்சி செய்யும் பாண்டிச்சேரியில் பிராந்திகடை கள்ளுகடை சாரயக்கடை எல்லாம் இருக்குதே உங்கள் மது ஒழிப்பு போராட்டத்துக்கு கூட்டனி கட்சிகளுக்க என்ன விதிவிலக்கா


சமூக நல விரும்பி
செப் 15, 2024 14:09

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாது என்று கூறுவார்கள். அது தான் திராவிட மாடல் அரசு


M Ramachandran
செப் 15, 2024 13:31

நாய் வாலை நிமிர்த்த முடியாது


Barakat Ali
செப் 15, 2024 12:08

திமுக எப்படி அரசியல் செய்தாலும், எத்தனை பல்டிகள் அடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் ....


மோகனசுந்தரம்
செப் 15, 2024 11:59

அன்புமணி இரண்டு திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளுடன் கூட்டணி போகாமல் இருந்தாலே உம்முடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்.


ramesh
செப் 15, 2024 11:20

இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் திருமா வளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகினால் உள்ளே நுழைந்து விடலாம் என்ற நப்பாசையில் மண் விழுந்து விடும் அன்புமணி அவர்களே


Ganesh
செப் 15, 2024 11:17

அரசியல் பிழைத்தூர்க்கு அறம் கூற்றாகும்... கண்டிப்பாக அறம் கூற்றாகும் போது வருந்துவதற்கு ஒன்றும் இருக்காது...


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2024 10:45

கட்சியில், ஆட்சியில் நடப்பது எதுவுமே புலிகேசிக்கு தெரியாது ........ அல்லது தவறுக்கு மேல் தவறாகச் செய்கிறார் ........ எது உண்மை ????


புதிய வீடியோ