உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு எதுவும் தெரியாது அன்புமணி கிண்டல்

முதல்வருக்கு எதுவும் தெரியாது அன்புமணி கிண்டல்

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, அதை பெருமிதம் என நினைத்துக் கொள்கிறார். தி.மு.க., அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், அது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல், அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது அரசில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. ஆனால், தமிழக மக்கள் அறிவாளிகள்; ஸ்டாலின் சொல்லும் பொய்களை நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasan
செப் 04, 2025 13:18

Mr.Ambumoney Sir, Mr.Karunaanidhi and Mr.Stalin never fought like the fight between Mr.Ramadoss and Mr.Ambumoney. Agree Sir?


Saran
செப் 04, 2025 12:40

படிக்க தெரியாது, நாட்டு நடப்பு தெரியாது, கோர்வையாக நான்கு வார்த்தை பேசத்தெரியாது. தனது ஆட்சியில் என்ன நடக்குதுன்னும் தெரியாது. இப்படி ஒரு முதல்வர் இந்தியாவில் வேறு யாரேனும் உள்ளனரா ?


Venugopal S
செப் 04, 2025 21:11

இதே தகுதிகளுடன் டெல்லியில் மிக உயர்ந்த பதவியில் ஒருவர் உட்கார்ந்து இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?


Perumal Pillai
செப் 04, 2025 11:20

ஊழல் மந்திரிகளும் ஊழல் அதிகாரிகளும் என்ன தவம் செய்தனரோ இப்படி ஒரு அறிவாளியான முதலமைச்சரின் கீழ் பணி செய்ய .


P. SRINIVASAN
செப் 04, 2025 09:33

ஆமா, அவரு உன்னமாதிரி திருடன் கிடையாது... நீ உன் குடும்பத்தையே அயிச்சவன், நீ எல்லாம் பேசுற.


Mani . V
செப் 04, 2025 05:59

ஹல்லோ இப்படி ஒட்டுமொத்தமாக பொத்தாம் பொதுவாக, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்லக்கூடாது. கொள்ளையடிக்கவும், கொள்ளையடித்ததை மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடு சென்று முதலீடு செய்யவும் தெரியும்.


முக்கிய வீடியோ