உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறமற்ற அறநிலையத்துறை: சீமான் ஆவேசம்

அறமற்ற அறநிலையத்துறை: சீமான் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறித் திளைத்து, அறமற்ற துறையாக தமிழக அறநிலையத்துறை மாறியுள்ளது' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலை, மக்கள் வழிபட திறக்காவிட்டால், கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுப்போம்' என அறிவித்ததும், 'ஒரு வாரத்தில் கோவில் திறக்கப்படும்' என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். அத்துடன், 'கோவில் திறக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்கிறது' என்றும் குற்றஞ்சாட்டினார்.கோவிலை அரசு திறக்கவிருப்பது எங்களுக்கு தெரியுமானால், நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும் வரை, ஏன் கோவிலை திறப்பதாக அறிவிக்கவில்லை. கோவில் நிலம் எனக்கூறி, ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளை பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள, பல்லாயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை மீட்காதது ஏன்? தமிழில் குடமுழுக்கு நடத்த போதுமான ஓதுவார்கள் இல்லை என, அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வெட்கமாக இல்லையா. ஆந்திரா, கேரளா கோவில்களில், தமிழில் அறிவிப்பு பலகை இல்லை. திருவண்ணாமலை கோவிலில் தெலுங்கில் அறிவிப்பு பலகை வைத்திருப்பது யாரை மகிழ்விக்க. இதுதான், தி.மு.க., அரசு கடைப்பிடிக்கும் இரு மொழி கொள்கையா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய அரசு, கோவில் வளாகத்தில் யானை மிதித்து இறந்த பாகன்களுக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்கவில்லை. அன்றாட பணிகளுக்கு பொருட்கள் வாங்குவது, பிரசாதம் வழங்குவது, உண்டியல் வருமானம், பக்தர்கள் காணிக்கை, கோவில் நகைகள் என, தமிழக அறநிலையத்துறைக்கு வரும் வருமானத்தில் நடக்கும் ஊழல்கள், வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல. தமிழகம் முழுதும் அறநிலையத்துறையில் நடக்கும் ஊழல்களை, கற்பனை செய்யவே முடியவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறித் திளைத்து, அறமற்ற துறையாக தமிழக அறநிலையத்துறை மாறியுள்ளது.எனவே, அறநிலையத்துறை வருமானம் மற்றும் செலவுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக்கூடாது என்பதல்ல எங்கள் கொள்கை. கோவில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை மாறி விடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhaskaran
ஏப் 07, 2025 19:35

திருவிழாக்கள் எல்லாம் மண்டகப்படி தாரீர் செலவு தீபம் எரிக்கும் எண்ணைய்கூட பக்தர்கள் வழங்குவது கடை வாடகை மனை வாடகை எல்லாம் அதிகாரிகள் ஏசி காரில் போவதற்கு இது அறக்கொள்ளைத்துறை தான்


vbs manian
ஏப் 07, 2025 09:31

கழக தலைவர் கோவில் கொள்ளையர் கூடாரமாக மாறிவிட்டது என்று எழுதிய வசனம் நிஜம்.


Perumal Pillai
ஏப் 07, 2025 09:02

கோவில்கள் திராவிட கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது .


V GOPALAN
ஏப் 07, 2025 08:18

HRCE gives contract for various activities for Kumbabishegam. Real work carried out is only Cleaning one coat white wash and below average color painting paper decoration during Kumbabishegam . Looting in crores for each temple every year. This is the regular money goes to sun family pocket continuously for 5 years. Unfortunately the locals also witnessing


VENKATASUBRAMANIAN
ஏப் 07, 2025 07:35

அண்ணாதுரை கூறியது போல் கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டது. திமுக அதை திறம்பட செய்து வருகிறது. அண்ணாதுரை இருந்தால் கட்சியை கலைத்திருப்பார்.. அந்த அளவுக்கு அவர்கள் எதிர்கட்சியின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை இவர்களே செய்கிறார்கள். இதுதான் திராவிட மாடல்


Svs Yaadum oore
ஏப் 07, 2025 07:15

திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்று சொன்னவர்தான் இவர், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவர். இப்ப என்னமோ கோவிலை, மக்கள் வழிபட திறக்காவிட்டால், கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நாடகம் .....இவனை நம்புவதற்கு பச்சோந்திகளை நம்பலாம் ....


xyzabc
ஏப் 07, 2025 06:16

உண்மை. முற்றிலும் உண்மை. சேகர் பாபுவின் வேஷம்


sundarsvpr
ஏப் 07, 2025 05:23

எது நடந்தாலும் ஆண்டவன் கவனித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் மக்கள் மௌனமாய் இருக்கிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதான். இது கலியுகம். ஆண்டவன் நிகழ்வுகள் தவறாக தெரியும். தீய சக்திகள் செய்திடும் நிகழ்வுகள் போற்றப்படும். உண்மையான நாஸ்திகனை போற்றுதல் தவறு இல்லை. அவனிடம் கொள்கை இருக்கும். ஆனால் நாஸ்திக ஆஸ்திக வேடதாரிகளுக்கு மனக்குழப்பம் ஒரு தண்டனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை