உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம், வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கிய போது விஏஓ முத்துலட்சுமி கையும் களவுமாக பிடிபட்டார்.திருப்பூர் மாவட்டம் கரடிவாவியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் விவசாயி. பட்டாவில் பெயர் சேர்க்க பல்லடம் வடுகபாளையம் புதூர் விஏஓ முத்துலட்சுமியை,44, அணுகினார். இதற்கு ரூ.30 ஆயிரம் முத்துலட்சுமி லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், அவர் முதலில் ரூ.10 ஆயிரத்தை பணத்தை கிருஷ்ணசாமியிடம் இருந்து பெற்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vuv0o60e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தை வீட்டில் வந்து கொடுக்குமாறு முத்துலட்சுமி கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.பின்னர், லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல் படி, முத்துலட்சுமி வீட்டில் சென்று ரூ.20 ஆயிரத்தை கிருஷ்ணசாமி வழங்கினார். அப்போது மறைந்த இருந்த, லஞ்சம் ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் போலீசார் முத்துலட்சுமி ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கிய போது, கையும் களவுமாக கைது செய்தனர். விஏஓ முத்துலட்சுமியிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

chinnamanibalan
நவ 10, 2025 19:27

அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. வருவாய்த்துறை இதில் முதலிடம் வகிக்கிறது. இதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய அரசு, கண்டு கொள்ளாமல் இருக்கிறது. என்று மாறும் இந்த அவலம்! ஓட்டுக்கு நோட்டு பெறுவோர் சிந்திக்க வேண்டும்!!


Yaro Oruvan
நவ 10, 2025 18:52

கோட்டா கோஷ்டி


V RAMASWAMY
நவ 10, 2025 18:05

பெயர் சேர்ப்பதற்கு ஒரு லஞ்சம், பிறகு பெயரை வேண்டுமென்றே தப்பாக எழுதிவிட்டு அதனை திருத்துவதற்கு ஒரு லஞ்சம், பின் அதன் நகல் பெறுவதற்கு ஒரு லஞ்சம். அரசு பணி முடிவதற்குள் ஒரு மாளிகையே கட்டிவிடுவார்கள்.


சாமானியன்
நவ 10, 2025 15:37

லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். இது பித்தலாட்டம். லஞ்சம் கொடுத்தவன் வாங்கியவனை கைகாட்ட மாட்டான். சட்டத்தை கொஞ்சம் ஆராய வேண்டும்.


vijay
நவ 10, 2025 15:13

ஆண் பெண் சமத்துவம் ஊழல் பண்றதிலேயும் வேணும்ன்னு பெண் உரிமையை நிலைநாட்டிய பெண்மணிக்கு வீர வணக்கம் . எதுக்கு அய்யா அவர்களை கைது பண்ணுகிறீர்கள் அவர்களை அழைத்து பாராட்டி அல்லவா இருக்க வேண்டும்.


perumal salem
நவ 10, 2025 15:02

salem ammapet registrar GOKULRAJ oru document register panni kudukka 15000 lanjam ketkiraar... government ivanunga ellam arrest panatha..


Gajageswari
நவ 10, 2025 14:50

தாசில்தார் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதால் எழும் பிரச்சினை.


Natchimuthu Chithiraisamy
நவ 10, 2025 14:25

2003 பின்னாடி பெனிபிட்ஸ் இல்லாததினால் லஞ்சம் வாங்கினால் கேஸ் முடியும் வரை சம்பளம் அரசிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். தனக்கு வேலை எதுவும் இல்லை என்று மாதம் ஒரு நாள் ஆபீஸ் சென்று சொல்ல வேண்டும் முழு சம்பளமும் உறுதி எனவே அரசு வேலை செய்ய சோம்பேறித்தனம். அரசுக்கு ஆள்குறைப்பு வேலையை போலீஸ் செய்கிறது அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு வெட்டிய வட்டி வேலை செய்யாத ஆட்களுக்கு சம்பளம். பல அரசு கட்டிடத்திக்கு பெயிண்ட் அடிக்க சொல்லலாம்


Gokul Krishnan
நவ 10, 2025 14:23

கையும் களவுமாக பிடித்து எதற்கு ஒரு சில மாதங்களில் வெளியே வந்து திருப்பூரில் செய்ததை இடம் மாற்றல் பெற்று திருவாரூரில் லஞ்சல் வாங்க போகிறார்


Sekar Times
நவ 10, 2025 14:15

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை