உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராம சாலை திட்டத்தில் மத்திய அரசிடம் பெற்ற ரூ.5,886 கோடி ரூபாய் நிதி எங்கே; அண்ணாமலை

கிராம சாலை திட்டத்தில் மத்திய அரசிடம் பெற்ற ரூ.5,886 கோடி ரூபாய் நிதி எங்கே; அண்ணாமலை

சென்னை: 'மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகம், 5,886 கோடி ரூபாய் பெற்றும், பல மாவட்ட கிராமங்களில் சாலை அமைக்கப்படவில்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நாகை மாவட்டம் ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், மக்கள் வயல் வரப்பு, ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் துவங்கி, மருத்துவ அவசர சிகிச்சைக்கு செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடி பாதையையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது.மழைக் காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கும், மக்கள் உள்ளாக நேர்கிறது. மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம், 5,886 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுதும், பல மாவட்ட கிராமங்களில், சாலைகள் அமைக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு திட்டத்தின் பெயரை மாற்றி, 'முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்' என்று, வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டனர். இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், எந்தெந்த கிராமங்களில், சாலைகள் அமைக்கப்பட்டன என, தமிழக பா.ஜ., சார்பில், வெள்ளை அறிக்கை கேட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே. முதல்வர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவலநிலையே சாட்சி. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினமும் ஒருநாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை, ஸ்டாலின் எப்போது நிறுத்த போகிறார். கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதை விட முக்கியமா, முதல்வரின் விளம்பர நாடகங்கள். அவரின், வேஷங்களை மக்கள் விரைவில் கலைப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karunagaran
ஜூலை 10, 2025 20:05

ஸ்வாஹா


rameshkumar natarajan
ஜூலை 10, 2025 10:02

For checking that theres an organization called CAG. During CAG audit, if any discripancy is found, it will be made as an audit point and explanation will be sought from Tamil nadu government. An IAS officer, will not know this process?


Mario
ஜூலை 10, 2025 09:07

பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


Senthoora
ஜூலை 10, 2025 09:02

இவரு தினம் ஒரு கேள்வி கேட்பார், செவிடன் காதில் சங்கு ஊதியிருந்தால், ஒரு வார்த்தையாவது சொல்லியிருப்பான்.


அருண், சென்னை
ஜூலை 10, 2025 08:04

எங்க ஊருக்கு வந்து பாருங்க, சும்மா சூப்பரா சிமெண்ட் ரோடு போட்டு, திறந்த வெளிகாவாய் போட்டு, அதை அடையாறு ஆத்துலேயும் கலக்காம, சென்னை விமானம் வழியா மழைக்காலத்தில், சாக்கடை தண்ணியும், செம்பரபாக்கம் ஏறி தண்ணியும் ஒன்றாய் கலந்து நாங்க ஏற்றுமதி செய்யப்போறோம்... சாக்கடை தோண்டிய மண்ணையும், நாங்க விட்டுவைக்கவில்லை, அதையும் ரூ1000துக்கு வித்துட்டோம், சக்காடைக்கு எதிரே உள்ள வீட்டில் ரூ20000 வசூல் செய்து கல்லா கட்டினோம், இதுவல்லாம் பொலிச்சலூர் பஞ்சாயத்துல நடந்து இருக்கு... நம்பிக்கை இல்லனா நேரா வந்து பாருங்க வார்டு கவுன்சிலர், தலைவர், ஒன்றிய கவுன்சிலர்களின் முன்னேற்றத்தை...


Kjp
ஜூலை 10, 2025 08:31

ஆனானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே பெப்பே காட்டியவர்கள் உங்களுக்கு பதில் சொல்லுவார்களா.திமுக முட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உங்கள் மேல் வசை புராணம் கிண்டல் கருத்து பதிவுகள் வரும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 10:02

அண்ணாமலை நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்து என்ன பிரயோஜனம்.. வார்டு கவுன்சிலருக்கு இருக்கும் சொத்துக்கள் அண்ணாமலைக்கு இருக்கா? சொந்தமாக யூனிவர்சிட்டி இருக்கா? மருத்துவமனை இருக்கா? வெளிநாட்டில் முதலீடு இருக்கா.. பிறகு எந்த தகுதியின் அடிப்படையில் அண்ணாமலை கேள்விகள் கேட்கிறார். ஊழல் செய்வது அவ்வளவு எளிதில்லை.. ஊழல் செய்த பணத்தை முதலில் மறைக்கனும். எதிர்கட்சிகள் கேள்விக்கு கூச்சமே இல்லாமல் பொய் சொல்லனும்.. ஈ டி ரைடு வந்தால் சிரிச்சுகிட்டே பதில் சொல்லணும். போலீஸ் கைது செய்தால் ..ஜெயிலுக்கு போகணும்..களி திங்கணும் ..பிறகு நாட்டு வக்கீலை வைத்து ஜாமீன் எடுக்கணும். வெள்ளை குடை பிடிக்கனும், பொழுது விடிந்தால் பயத்திலும் பீதியிலும் காலத்தை கழிக்க வேண்டும். ஊழல் செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அண்ணாமலை? உங்களால் ஒரு ஊழல் செய்து எங்களை போல் விஞ்ஞான ரீதியில் தப்பிக்க தெரியுமா?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 06:42

அண்ணாமலை சார் ...கட்சி கணக்கு கேட்ட எம்ஜிஆரை தூக்கி ஏறித்தோம் ...இப்போ மத்திய அரசிடம் பெற்ற ரூ.5,886 கோடி ரூபாய் நிதி எங்கே என்று கேட்கிற்றீர்கள் ...இரக்கமில்லையா உங்களுக்கு ..என்ன அரக்கத்தன்மான கேள்வி இது ... அந்தத்தொகையை விங்ஞான ரீதியில் ஆடையை போட்டுவிட்டோம் ...நிதி கொடுத்துவிட்டு கேள்விகேட்டது மனித குலத்திற்கு எதிரான கேள்வி இது ? இது மாநில சுயாட்சி கொள்கைக்கு கொள்ளைக்கு எதிரானது ... நிதி கொடுபப்துதான் மதியஅரசின் வேலை ..கணக்கு கேட்பதல்ல .. கணக்கு கேட்பது மதவாதம் .. சனாதன கொடுமை ..உங்களுக்கு வீராணம் ஊழல் தெரியுமா ...பூச்சிமருந்து ஊழல் தெரியுமா? ... ரஞ்சித் சிங் சர்க்காரியா தெரியுமா ?.. நெருக்கடி நிலையின்போது எங்களை பின்னிப்பெடலெத்தது ..நாங்கள் கதறிய கதறல் .. தெரியுமா ?.. நேர்மையான முன்னாள் போலீஸ் அதிகாரியே ,,,ரொம்ப பேசாதீர்கள் அப்புறம் எங்களுக்கு கோபம் வந்தால் இரும்புக்கரம் கொண்டு வெள்ளைக்குடை பிடித்து வீரத்துடன் , மானத்துடன் ..செல்வோம் சேரு முனை நோக்கி .....அணிஅணியாய் திரண்டு வருவோம் .அலைகடலென ஆர்ப்பரித்து வருவோம் ....இந்திரா காந்தியை சேலைகட்டிய ஹிட்லர் என்றோம் ...பிறகு சர்க்காரியா கமிஷனிலிருந்து தப்பிக்க ""நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சி தருக என்று கதறியதுபோல் .."மோடியே வருக முத்தான ஆட்சியை தருக "" என்று தொண்டை கிழிய ..அலறுவோம் கதறுவோம் ...உங்களால் என்ன செய்யமுடியும் ..எங்களுக்கு இரக்கம் காட்டுவதை தவிர ..


ராமகிருஷ்ணன்
ஜூலை 10, 2025 06:12

அப்போதே 5886 கோடிகளை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு அண்ணாமலை, இப்ப வந்து கேக்கறீங்க


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 06:50

கர்நாடக சிங்கம் என்று பெயரெடுத்த முன்னாள் போலீஸ் அதிகாரி கேட்குது .. இதேப்போல் சர்க்காரியா கமிஷனில் எங்களிடம் கேட்காத கேள்வியா ,,நாங்கள் சொல்லாத பதிலா ? எங்கள் பதிலைபார்த்து அவர்கள் திக்கி தெறிச்சு ஓடியதை கேள்வி பாத்ததில்லையா .. நல்லா கேட்குறர்யா டீடைலு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை