உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இபிஎஸ் கேள்வி

சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இபிஎஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: ‛‛ கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்?'' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.தஞ்சாவூரில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளில் தண்ணீர் திறக்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டனம்

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சராக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தது கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராடுவதால் பலன் இல்லை. இந்த தேர்வை ஒழிக்க 40 எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ரத்து செய்ய பாடுபட வேண்டும்.

தேவையில்லாதது

இத்தனை ஆண்டுகாலம் அதிமுக.,வை காப்பாற்றியது யார்? அரசியல் ரீ என்ட்ரி என்பது விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வது போன்றதா?கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யார்; தொண்டர்கள் தான்! அதிமுக.,வில் யாரும் சாதி பார்ப்பது கிடையாது. சசிகலாவின் கருத்து தேவையற்றது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே தற்போதும் தொடர்கின்றனர்.

மக்கள் தண்டனை

இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டவர் ஓ. பன்னீர்செல்வம். பலாப்பழத்தை வைத்து மத்திய அமைச்சராக முயற்சி செய்தார். எந்த காலத்திலும் அவர் யாருக்கும் விஸ்வாசமாக இருந்தது கிடையாது. அனைத்திலும் சுயநலம். மக்கள் அவருக்கு சரியான தண்டனை வழங்கி உள்ளனர். அவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Seenu Krishnamurthy
ஜூன் 22, 2024 09:42

குற்றவாளிகள் எங்கே போவார்கள் ஒரே இடம் அரசியல் மொத்தமாக குற்றவாளிகள்


Seenu Krishnamurthy
ஜூன் 20, 2024 21:43

கிரிமினல் கூட்டத்துக்கு கிரிமினல் தானே தலைவராக முடியும்


Rajkumar M
ஜூன் 20, 2024 08:56

உங்க பருப்பு வேகலை. போற போக்குல புரட்சி தலைவர் ஆரம்பிச்ச கட்சி உங்களால ஊத்தி மூடிக்கும் போல இருக்கு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கட்சியை காப்பாத முடியுமான்னு பார்க்கத்தான்


பேசும் தமிழன்
ஜூன் 20, 2024 08:24

ஒரு திராவிட கட்சி அழிவது.... தமிழர்களுக்கு நல்லது தானே ???


பேசும் தமிழன்
ஜூன் 20, 2024 08:21

நீங்கள் கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால்.... கட்சியை காப்பாற்ற அனைவரும் முயற்சி செய்கிறார்கள்.... பழனி இல்லாத அதிமுக வந்தால் அந்த கட்சி பிழைக்கும்..... இல்லை என்றால் அதோ கதி தான்.


வீர தமிழன்
ஜூன் 20, 2024 05:39

திரு அண்ணாமலை மட்டும் பாஜக தலைவரா இல்லாமல் இருந்திருந்தால் நம்ம கட்சி இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்காது எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை தான் ஆனாலும் ஒன்ற கோடி தொண்டர்கள் இன்னமும் இபிஎஸ் தலைமையில் கீழ தான் இருக்காங்க. எந்த ஒரு கட்சியாலும் எந்த தலைவராலும் இக்கட்சியை அழிப்பது என்பது கனவில் கூட நிறைவேறாது.


R.MURALIKRISHNAN
ஜூன் 19, 2024 23:27

தரையில் தவழ்ந்து காலை வணங்கிய காட்சியெல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.....


Rpalnivelu
ஜூன் 19, 2024 23:27

எட்டப்பன் அதிமுக நிலை கொர்ர்ர் கொர்ர்ர்


vijay,covai
ஜூன் 19, 2024 22:12

கட்சி நடதிரலாம் ஆனா ஜையக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்,அதை e p s உணர வேண்டும்


T.sthivinayagam
ஜூன் 19, 2024 22:05

இந்த கேள்வியை மத்திய அமைச்சரிடம் கேளுங்கள் அவர்தான் எல்லாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை