மேலும் செய்திகள்
மாவட்ட தொழில் மையம் வழங்குது ஏராளமான திட்டங்கள்
01-Oct-2025
சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு, 6 சதவீத வட்டி மானியம் வழங்க, அரசின் அனுமதிக்கு இரு மாதங்களாக, 'டிக்' நிறுவனம் காத்திருக்கிறது. இது, தொழில் முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும், 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது. இந்நிறுவனம் வழங்கும் மொத்த கடனில், 90 சதவீதம் வரை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தான் வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, அந்த பிரிவுக்கான கடனில், 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. இதன் வாயிலாக, கடன் வாங்கியவர்கள், தவணை தொகையை சரிவர செலுத்தினால், ஆண்டின் முடிவில் மொத்தமாக செலுத்திய வட்டியில், 6 சதவீதம் அசலில் வரவு வைக்கப்பட்டது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் செலவானது. இரு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வட்டி மானியத்தை மீண்டும் செயல்படுத்துமாறு, தொழில் முனைவோர், 'டிக்' நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, 6 சதவீத வட்டி மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டு, இரு மாதங்களுக்கு முன் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது: மீண்டும், 6 சதவீத வட்டி மானியம் வழங்குமாறு, 'டிக்' நிறுவனத்திற்கு தொழில் நிறுவனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு மாதங்களாகியும் அரசு அனுமதி தராமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
01-Oct-2025