உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு... காங்கிரஸ், பாகிஸ்தான் எண்ணம் ஒன்றுதான்: பாக்., அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு... காங்கிரஸ், பாகிஸ்தான் எண்ணம் ஒன்றுதான்: பாக்., அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் எண்ணமும் ஒன்று தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி இன்று பேரணி நடத்த இருக்கிறார். பிராந்திய கட்சியான ஒமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஆட்சியைப் பிடித்தால் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. அதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் கூட, 370 சட்டப்பிரிவு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், கூறியிருப்பது இந்தியாவில் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மிர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம், பாகிஸ்தானைப் போல, தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணியிடமும் இருக்கிறது, எனக் கூறினார். இதனிடையே, காங்கிரஸ் இந்திய நலனுக்கு விரோதமான கட்சி என்று பா.ஜ., ஐ.டி., விங்கின் தலைவர் அமித் மால்வியா விமர்சித்துள்ளார். அதேபோல, 'பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது. இதுக்கு மேலயும் சந்தேகம் வேண்டுமா? பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தான் பக்கம் நிற்கிறார்கள்', என்று காங்கிரஸ் மீது பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ramani Venkatraman
செப் 20, 2024 12:44

"பாரத் மாதா" யாரு...இப்படி கேட்டு குழப்புகிற ஒருவரை தலைவராக எண்ணி முட்டுக் கொடுப்போரை எண்ணி அழுவதா...சிரிப்பதா தன் நாட்டின் மேல் பற்றே இல்லாத எந்த மனிதனும் தலைவரால், அது மக்களின் அவல நிலையே காட்டுகிறது


Sivakumar
செப் 19, 2024 22:28

ஒரு பகுதி பாகிஸ்தான் தனியாக போகவைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. அதுவும் பாகிஸ்தானும் ஒண்ணாம். கேக்குறவன் கேனையன்நா என்னவேணும் பேசலாம்


Rajalingam
செப் 19, 2024 21:30

இந்த காங்கிரஸ் கான் பேமிலி தானா இந்த நாடு உடைந்து போனது?? இந்த கான் இந்தியா ல அதிகமா லேண்ட் குடுத்து வஹாபி போர்டு


பேசும் தமிழன்
செப் 19, 2024 20:14

இரண்டு பேருமே..... நம் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்...... அவர்கள் இரண்டு பேருமே ஒழிய வேண்டியவர்கள்.


Sivakumar
செப் 19, 2024 18:51

இந்த நாட்டுக்காக இரண்டு தலைமுறைகளை காவுகொடுத்த குடும்பமும் கட்சியும் நாட்டுக்கு எதிரானவர்களாம். ஏன்னா அவிங்க எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் சரிசமமா நடுத்துறதால அவுங்கள இப்படி மட்டும்தான் குற்றப்படுத்த முடியும்.


பேசும் தமிழன்
செப் 19, 2024 20:20

என்னாது... இரண்டு தலைமுறைகளை காவு கொடுத்தார்களா ??? ராஜீவ்... தேவையில்லாமல் அடுத்த நாட்டின் விஷயத்தில் தலையிட்டு.... விடுதலைப்புலிகளை அழிக்க காரணமாக இருந்தது.... இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட....ஈழத்தமிழ் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட காரணமாக இருந்தவர்.... அவரை கொலை செய்ய மனித வெடிகுண்டாக இருந்த தணு அவர்களும்... அப்படி ராஜீவ் காந்தி அவர்களால் பதிக்கப்பட்ட பெண் தான் என்று படித்த நியாபகம்.


Rajalingam
செப் 19, 2024 21:34

இந்த பேமிலி தானே இந்தியா உடைத்து போனது?? எத்தனை ஸ்ரீலங்கா தமிழன் செத்து ponan


Nandakumar Naidu.
செப் 19, 2024 18:23

அதான் ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ராகுல் வின்சி கான் ஒரு தீவிரவாதி என்று சொல்லிவிட்டாரே. அது உண்மை தான் போலும்.


sankaranarayanan
செப் 19, 2024 17:15

இந்த பூனைக்குட்டி இது எப்போதுமே பாக்கின் பக்கம்தான் இது தெரிந்த விஷயம்தான்


என்றும் இந்தியன்
செப் 19, 2024 16:28

பாகிஸ்தானில் ஆட்சியில் இருப்பது முஸ்லிம்கள். இந்தியாவில் ஆட்சிக்கு வரத்துடிப்பது நேரு காங்கிரஸ் ஆகவே அவர்கள் நம் ஒன்றாகத்தானே இருக்கும்.


kannan sundaresan
செப் 19, 2024 14:43

எதிர் கட்சிகளின் பப்பு வேகாது. நாட்டை பிளவு படுத்த நினைக்கும் எந்த தேச இந்திய மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்.


spr
செப் 19, 2024 14:20

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் எண்ணமும் ஒன்று தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருப்பது இவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது இது பாஜகவின் சதி என்று சொல்லிவிட வேண்டியதுதானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை