உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

ஜெருசலேம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். மேற்காசிய நாடான லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது.இவர்கள் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தங்களுக்குள் ரகசிய தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள், பொதுமக்கள் என 37 பேர் உயிரிழந்தனர். 3,000 பேர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் கூறுகிறது. பேஜர்களை வெடிக்கச் செய்ததற்கு பதிலடி தருவோம் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்திருந்தார்.அதன்படி வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று, 140 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் பலவற்றை வானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். 59 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kumar Kumzi
செப் 21, 2024 10:55

அமெரிக்கா புதிதாக கண்டு பிடித்திருக்கும் குண்டுகளை பரிசோதித்து பார்க்க வேண்டும்


Kasimani Baskaran
செப் 21, 2024 07:04

இஸ்ரேலிடம் வம்பு செய்தால் வசமாக வைத்துச்செய்வார்கள் என்பது எகிப்து போன்ற நாடுகளுக்கு நன்கு தெரியும். ஆனால் ஈரானின் தூண்டுதலில் மதியிழந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு தெரியாமல் போனது சோகமானது.


ராமகிருஷ்ணன்
செப் 21, 2024 06:40

இஸ்ரேல் விரைவில் நல்ல சம்பவம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏன் தாமதம் செய்கிறது


SUBBU,MADURAI
செப் 21, 2024 08:18

நீங்கள் சொல்வது போல் போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் விரும்பாது. மிகவ்ம் ஆபத்தான பெரிய தலைகளை மட்டும் போட்டுத் தள்ளிவிட்டு அவர்களுக்கு அடுத்த கட்ட தலைவர்களை வளர விட்டு முடிந்த வரை போரை முடிக்க விடாமல் செய்வதுதான் இஸ்ரேலின் ராஜதந்திரம்! அப்போதுதான் அவர்கள் நாட்டிலும் நெதன்யாஹூவிற்கு எதிர்ப்புக் குரல் எழும்பாது மேலும் உலக நாடுகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கும்!


karupanasamy
செப் 21, 2024 05:51

பாலஸ்தீனம், லெபனான் , சிரியா, ஈரான், ஈராக், சஉதி, குவைத், கட்டார் போன்ற முசுலீம்களை பெருவாரியான மக்களை கொண்ட பயங்கரவாதிகள் நிறைந்த நாடுகளை முற்றிலும் அழித்துவிட்டு பயங்கரவாதமற்ற புதிய சமூகத்தை குடிஅமர்த்தவேண்டும்.


Anand
செப் 21, 2024 11:38

கூடவே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....


SUBBU,MADURAI
செப் 21, 2024 05:15

In a BIG success, Israeli forces have targeted the Beirut area and killed Ibrahim Aqil, No2 Hizb commander, the head of the Hezbollahs operations team, the acting commander of the Radwan unit and the commander of the Plan for the Conquest of the Galilee in a precision strike. Ibrahim Aqil was wanted by the FBI for the 1983 bombings of the US Embassy and Marine Corps Headquarters in Beirut and had a $7 million bounty on his head.


SUBBU,MADURAI
செப் 21, 2024 05:08

Israeli PM Netanyahu in a statement, We have only just begun we are going to change the Middle East!


Duruvesan
செப் 21, 2024 05:07

மார்க்கம் அமைதி எப்போது போதிக்கும்


SUBBU,MADURAI
செப் 21, 2024 04:40

This was just a start of war against Hezbollah by Israel by finding their locations. Israel will keep attacking and eIiminating them in next few days. They will also end with the same fate as Hamas.


Duruvesan
செப் 21, 2024 04:21

இவனுங்களுக்கு அறிவு கெடயாது. அவனை போயி சொறிஞ்சி விட்டு இப்போ கதறல் ஏன்?


Kannan Chandran
செப் 21, 2024 03:10

200க்கும் அதிகமான அப்பாவிகளை கொன்ற இந்த தீவிரவாதி தலைக்கு 1983ல் அமெரிக்கா வைத்த சன்மானம் ஏழு மில்லியன் டாலர், அந்த பரிசை தற்பொழுது இஸ்ரேல் பெற்றுக்கொள்ளும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை