உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் உள்ள ஆலையில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட தென்கொரியர்கள் கைது

அமெரிக்காவில் உள்ள ஆலையில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட தென்கொரியர்கள் கைது

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள 'ஹூண்டாய் பேட்டரி' ஆலையில், அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட ஆசிய நாடான தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட, 475 வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர், தொழிலாளர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜார்ஜியா மாகாணத்தில், தென்கொரியாவைச் சேர்ந்த, 'ஹூண்டாய் மோட்டார்ஸ்' நிறுவனம் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த, 'எல்.ஜி., எனர்ஜி சொல்யூஷன்' நிறுவனத்துடன் இணைந்து இது நடத்தப்படுகிறது. இத்தொழிற்சாலையில் சமீபத்தில் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கூறி, 475 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரியர்கள் என கூறப்படுகிறது-. இது குறித்து வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துள்ளார் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹியூன். கைது நடவடிக்கையில் சிக்கியவர்களை மீட்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அக்குழு அமெரிக்கா செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், “நுாற்றுக்கணக்கான தென்கொரிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். மேலும், இதற்கு கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார். வர்த்தக ஒப்பந்த விபரங்கள் மற்றும் வரிகள் குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையே ஏற்கனவே பிரச்னை இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்த ஊழியர்கள்

இந்த கைது நடவடிக்கை குறித்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது: கைது செய்யப்பட்டவர்களில் யாரும் எங்களால் நேரடியாக பணியமர்த்தப்படவில்லை. அனைத்து சப்ளையர்களும் அவர்களது துணை ஒப்பந்ததாரர்களும், அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய நாங்கள் விசாரணை நடத்துவோம். சட்டத்தை பின்பற்றாதவர்களை ஹூண்டாய் பொறுத்துக்கொள்ளாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

theruvasagan
செப் 07, 2025 17:51

கொரியர்கள் நல்ல திறமை உள்ளவர்கள் உழைப்பாளிகள். அவர்கள் குடியேறி இருக்கும் நாட்டுக்கு அவர்களால் நன்மையே அதிகம். ஆனால் இங்கு நாலாபுறமும் எல்லை கடந்து வந்து புகுந்த கும்பல்கள் மதமாற்றம் பிரிவினைவாதம் குண்டு வைப்பு போதைப்பொருள் விற்பது கள்ள ஓட்டு போடுவது போன்ற தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் உருப்படிகள். அவர்களை காட்டிக் கொடுக்காமல் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் நாசகார உள்ளூர் கும்பல் அவர்களைவிட ஆபத்தானவர்கள்.


G Mahalingam
செப் 07, 2025 17:47

பங்களாதேஷிகள் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் கணக்கு காட்டவேண்டும் என்பதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை 10 பேரை‌ மட்டும் பிடித்து அனுப்புவார்கள். இந்திய மக்களை நம்ப வைத்து மோசடி செய்யும் காங்கிரஸ் மம்தா கட்சி, திராவிட மாடல் ஆட்சி.


Kasimani Baskaran
செப் 07, 2025 07:43

ஒரு மில்லியன் கொரியர்கள் லாஸ் ஏஞ்சல்ஸின் கொரியா டவுன் என்ற பகுதியில் வசிக்கிறார்கள். கடும் உழைப்பாளிகள். கொரியாவில் இருந்து தென் அமேரிக்கா சென்று அங்கு சிலகாலம் ஏராளமாக சம்பாதித்து விட்டு வட அமெரிக்காவில் புகுந்தவர்கள். 90களில் அங்கு சென்று இருக்கிறேன். உழைப்பால் சம்பாதித்ததில் குளிக்கிறார்கள் என்றே சொல்லலாம்.


Natarajan Ramanathan
செப் 07, 2025 10:24

நியூயார்க்கிலும் நமது விநாயகர் கோயில் இருக்கும் பிளஷிங் என்ற பகுதியில் ஏராளமான கொரியன்கள் உண்டு. அந்த பகுதி முழுதுமே அனைத்து கடைகளிலும் கொரியன் மொழியில்தான் பெயர் பலகையே இருக்கும். அதேபோல பெரும்பாலான நகரங்களில் சைனாடவுன் என்ற பெயரில் ஒரு பகுதி இருக்கும்.


தியாகு
செப் 07, 2025 07:27

இதெல்லாம் ஒரு நியூஸா, எங்கள் டுமிழ்நாட்டிற்க்கு வந்து பாருங்கள். பங்களாதேஷ் கள்ள குடியேறிகள் சர்வ சாதாரணமாக ஆதார் அட்டை வைத்துக்கொண்டு வீதிக்கு ரெண்டு பேர் திருவானுங்க..


Kudandhaiyaar
செப் 07, 2025 16:59

அது திமுகவினர் போற்றும் திராவிடர்


சமீபத்திய செய்தி