உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி: உறுதி செய்தது நீதிமன்றம்!

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி: உறுதி செய்தது நீதிமன்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக்காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. அவருக்கு, 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், அந்நாட்டு அரசில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் கடுமையான ஊழல்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. இன்று (செப்.,24) உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

குற்றவாளி

அப்போது, பதவிக்காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தது ஆகிய 5 குற்றச்சாட்டுகளில் ஈஸ்வரன் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீதிருந்த வேறு சில கடுமையான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. பரிசு பெற்றது, நீதிக்கு இடையூறு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், அவர் குற்றம் இழைத்திருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான சிறைத்தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதிகபட்சம் 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சட்டத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KRISHNAN R
செப் 24, 2024 19:31

Ayyoda


Barakat Ali
செப் 24, 2024 19:27

தமிழர் ன்னு போடலை ........ தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ன்னு போடலை .... ஓஹோ .... நல்ல பேரு வாங்கிக்கொடுத்தாத்தான் அப்படிப்போடணுமோ ????


என்றும் இந்தியன்
செப் 24, 2024 17:23

இந்தியாவில் அதுவும் டாஸ்மாக்கினாட்டில் இதெல்லாம் நடக்கவே நடக்காது ஒரு கவுன்சிலருக்குக் கூட


Amar Akbar Antony
செப் 24, 2024 16:49

தமிழன்டா


raju
செப் 24, 2024 16:46

இதை எதற்கு இந்தியா ஊடகங்க ளில் போடுகிறீர்கள் . அந்த அளவுக்கு சுத்தமா ?


Kumar Kumzi
செப் 24, 2024 15:04

திராவிஷ விழுதுகளின் பழக்க தோஷம்


vee srikanth
செப் 24, 2024 14:10

இந்தியர்களின் மானத்தை கப்பலேற்றிவிட்டார்


Iyer
செப் 24, 2024 13:44

"ஈஸ்வரன் தவறை ஒப்புக்கொண்டார்." - உண்மையாகவே அவர் ஈஸ்வரன்தான். நம் நாட்டு அரசியலில் ஒரு ஈஸ்வரன் இல்லையே.


புதிய வீடியோ