உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் வாக்குமூலம்

பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் வாக்குமூலம்

புதுடில்லி : 'கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தோம். அந்த மோசமான செயலுக்கான தண்டனையை ரொம்பவே அனுபவித்து விட்டோம்' என பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் இதை வாக்குமூலம் போன்று விவரித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ftr18nq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனினும், இதற்கு முன் நடந்ததை போலவே, பஹல்காமில் நடந்த தாக்குதலும், சுய லாபத்துக்காக மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு அல்லது அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று அவர் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

ஊர்ஜிதம்

பஹல்காமில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; இது, 2008 மும்பை தாக்குதலுக்கு பின் நடந்த மோசமான தாக்குதல். வழக்கம் போல, நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசு தான் இதற்கும் காரணம் என, பரவலாக நம்பப்பட்டது. மத்திய அரசும் உளவு தகவல்கள் வாயிலாக அதை ஊர்ஜிதம் செய்தது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பாவின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக, இந்திய உளவுத்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அந்த அமைப்பும் இதை பெருமையுடன் ஊர்ஜிதம் செய்தது. அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது என்பதும் அம்பலமானது. ஆனால், ஸ்கை நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த பாக்., ராணுவ அமைச்சர், 'இதெல்லாம் இந்தியா சொல்லும் தகவல்; நான் இந்த பெயரையே கேள்விப்பட்டது இல்லை' என்றார். அதோடு நிற்கவில்லை. 'லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கதையே முடிந்த விஷயம். தாய் அமைப்பே இல்லாத போது, அதன் கிளையாக ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் எப்படி இயங்க முடியும்?' என்று கேட்டார்.

உலகறிந்த ரகசியம்

எனினும், பேட்டி எடுத்த பெண்மணி யால்டா ஹக்கீம் விடவில்லை. ஒசாமா பின்லேடன் யார் என்றே தெரியாது என்று சொன்ன பாகிஸ்தான் அரசையும், பாகிஸ்தானில் அரசு ஆதரவுடன் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து தாக்கி கொன்றதையும் பார்த்த பிறகு, அந்த அரசின் பேச்சை உலகம் நம்புவதில்லை என்பதை நாசூக்காக சுட்டிக் காட்டினார். அதன் பிறகு தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மனம் திறந்தார். 'உண்மையில் பாகிஸ்தான் தான், பயங்கரவாத அமைப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு' என அவர் புலம்பினார். கடந்த 1980களில் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் படைகளை துரத்துவதற்காக தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதில் பாகிஸ்தானின் பங்களிப்பு கணிசமானது. அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் கணிசமான நிதியும், ஆயுதங்களும் வழங்கியது வரலாறு. அதில் பெரும் பங்கை பாகிஸ்தான் ராணுவம் சுட்டதும் உலகறிந்த ரகசியம்.யால்டா அந்த நினைவுகளை எல்லாம் கிளறி விட்டதால் தளர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமைச்சர், மறுக்க மனம் வராமல் ஒப்புக் கொண்டார்.

30 ஆண்டுகள்

'ஆமாம், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். இன்று பயங்கரவாதி என அழைக்கப்படும் அவர்கள் எல்லாம் அன்று சோவியத் படைகளை எதிர்த்து போராடும் விடுதலை போராளிகளாக மதிக்கப்பட்டனர். 'அவர்களின் தளபதிகள், அமெரிக்காவில் செல்வாக்குடன் வலம் வந்தனர். 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அந்த பயங்கரவாதிகளுக்கு நிதியும், பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது உண்மை தான். 'அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளுக்காக அதை நாங்கள் செய்தோம்; அதற்கான பலனை அனுபவித்தோம்' என்றார்.

'பயங்கரவாதிகள் என்றாலே கூலிப்படை தான்'

பயங்கரவாதிகள் எப்போதும் எந்த நாட்டுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். யார் பணமும் ஆயுதமும் தருகின்றனரோ, அவர்கள் சொல்வதை கேட்பர் என்பதை பாக்., அமைச்சர் கோடிட்டு காட்டினார். 'அவர்களுக்கு நீங்கள் வெவ்வேறு பெயர் சூட்டலாம். ஆனால், எல்லாரும் ஒன்றுதான். யாரை தாக்க சொல்கிறோமோ, அவர்களை தாக்குவர். அந்த சந்தர்ப்பம் வராதபோது, அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்வர்' என்றார். பாக்., ராணுவமும், அதன் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யும், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை நடத்த, அதே பயங்கரவாதிகளை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை, பாக்., ராணுவ அமைச்சர் சுற்றி வளைத்து இந்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். ராணுவ அமைச்சர் பதவியில் இருப்பவர் இந்த உண்மையை ஒப்புக் கொண்டது இதுவே முதல் தடவை. இதனால், அமைச்சர் தன் பதவியை அல்லது உயிரை இழந்தால் கூட ஆச்சரியம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 'இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால், நாங்களும் பதிலடி கொடுப்போம்' என்ற சம்பிரதாயமான கோஷத்துடன், அமைச்சர் பேட்டியை முடித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

thehindu
ஏப் 26, 2025 21:25

உத்தமர்கள் ஒப்புக்கொண்டார்கள். இங்குள்ள இந்துமதவாத ஜென்மங்கள் இனியும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது . டிரில்லியன் டாலர்கள் பறிகொடுத்த பின்பும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது


Sivakumar
ஏப் 26, 2025 19:46

Acknowledged by the receiver (of benefits, in cash and kind). When are the givers (so-called Western nations) going to acknowledge? There is no policeman for Global Order / justice, looks like!


Velan Iyengaar
ஏப் 26, 2025 16:53

இவ்ளோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு ... ஆனா பிஹார் போய் தேர்தல் மாநாடு நடத்தும் ஒரு ஆசாமியை பார்த்ததுண்டா சுதந்திர இந்தியா ?? இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் ?? இது நியாயமா மக்களே ???


Velan Iyengaar
ஏப் 26, 2025 16:41

370ஐ நீக்கிவிட்டோம் என்று எக்காளமிடுவது மட்டும் சங்கிகளின் வேலை இல்லை ... அந்த மாநில மக்களுக்கும் அங்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதும் இவனுங்க வேலை தான் என்பது கூட தெரியாத அறிவிலி கும்பலிடம் நாடு மாட்டி சிக்கி சீரழிகிறது ....


Kasimani Baskaran
ஏப் 26, 2025 15:59

காந்தீயக்கொள்கைதான் நாட்டை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. 1947க்குப்பின் இராணுவத்தை படு கேவலமாக வைத்து இருந்ததால்த்தான் பாகிஸ்தானிகளிடம் கூட காஷ்மீரின் ஒரு பகுதியை இழக்க வேண்டியது வந்தது. இதில் அடுத்தவனை குறை சொல்லி பயனில்லை. இவா போல இராணுவத்தை வைத்திருந்தால் இலங்கை கூட இந்தியா எங்கள் சொந்தம் என்று சொல்லும்.


Velan Iyengaar
ஏப் 26, 2025 16:57

அப்படியே இருந்தாலும் அது பொய் என்பது வேறு விஷயம் பத்துவருஷம் கூட பத்தாதா ராணுவத்தை சரி செய்ய ?? இன்னமும் நேரு காந்தி என்று குறைசொல்லி திரிய மனம் கூசவே கூசாதா ???


Chandradas Appavoo
ஏப் 26, 2025 14:33

ஓவிய விஜய் & வேலோன் ஐயர் நல்ல ற்றேஅத்மேன்ட் எடுக்கவேண்டும்


Velan Iyengaar
ஏப் 26, 2025 16:28

பஜனை சத்தம் மட்டும் காதுக்கு இனிக்குமா ?? மாற்று கருத்துக்கு இடமே இருக்கக்கூடாதா ?? பா சி ச போக்கை நோக்கி இந்த கேடுகெட்ட கும்பல் செல்வது தெளிவாகுதா ??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 13:58

கிம்ச்சை மன்னரின் ஆள் போல செயல்படுகிறார் .... திசை திரும்புவதில் கில்லாடி ....


Krishna Renga
ஏப் 26, 2025 13:24

வெளிவுறவு துறை அமைச்சர் ஜெய் ஷ்ங்கர் சொன்னது 100% உண்மை. பாகிஸ்தான் கர்மாவை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. நம் ராணுவ வீரார்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இதுவே பாகிஸ்தானின் விதி. பாகிஸ்தானின் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செயலை உலகமே கை கொட்டி சிரிக்கும் காலம் ஆரம்பம்.


krishna
ஏப் 26, 2025 13:24

IVARU POI SOLLRAARU.ELLATHUKKUM KAARANAM MODI MATTUME.IPPADIKKU DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBAL DRAVIDA MODEL KAIPULLA MAMATHA BEGUM MATTRUM I.N.D.I KOOTANI MAFIA KUMBAL.


Oviya Vijay
ஏப் 26, 2025 13:24

எதிர்காலத்தில் என்றேனும் ஒருநாள் ஆர்எஸ்எஸ்ஸும் நாங்கள் தான் இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்புணர்வை வளர்த்தோம். அதற்கான பலனை இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கத் தான் போகிறது... இன்று விதைக்கும் விதை அடுத்த பிரச்சனைக்கான அடித்தளம் என்பதை மறந்து மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தானே ஒழிய அரசியலில் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு மக்களைத் தூண்டி விடும் பண முதலைகள் அல்ல...


SUBRAMANIAN P
ஏப் 26, 2025 13:52

ஹயிலி எஜுகேட்டேட் போல.


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 14:34

ஆர்எஸ்எஸ் தலைவர் என்றுமே மைனாரிட்டி மதத்தினரை தவறாகப் பேசியது கிடையாது. ஆனால் தனது மதத்தை ஏற்காத மாற்று சமுதாயத்தை பாவிகள் காபிர் என்றெல்லாம் இழிவாகப் பேசுவது யார்? மேற்கு வங்கத்தில் இப்போ ஹிந்துக்கள் மீது நடக்கும் இனவெறி தாக்குதலை எந்த INDI தலைவர் கண்டித்தார்?


சமீபத்திய செய்தி