வாஷிங்டன்: தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயண தடையை விரிவுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா உத்தரவிட்டது. க்ரீன் கார்டு வைத்து இருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். ஏற்கனவே அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 19 நாடுகளில் இருந்து அதன் பயண தடையை 30க்கு மேற்பட்ட நாடுகளாக விரிவுபடுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பயணத்தடையை 32 நாடுகளுக்கு அதிகரிக்க பரிந்துரைத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமது முன்னோர்கள் இந்த தேசத்தை ரத்தம், வியர்வை சிந்தி கட்டியெழுப்பினர். வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது ஹீரோக்களைக் கொல்வதற்கோ, நமது கடின உழைப்பால் சம்பாதித்த வரி டாலர்களை உறிஞ்சுவதற்கோ அல்லது அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பறிப்பதற்கோ அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.19 நாடுகள் ஏது?
அமெரிக்காவுக்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?* ஆப்கானிஸ்தான், * பர்மா, * சாட், * காங்கோ குடியரசு, * ஈக்குவடோரியல் கினியா, * எரித்திரியா, * ஹைட்டி, * ஈரான், * லிபியா, * சோமாலியா, * சூடான், * ஏமன், * புருண்டி, * கியூபா, * லாவோஸ், * சியரா லியோன், * டோகோ, * துர்க்மெனிஸ்தான்,* வெனிசுலா