உள்ளூர் செய்திகள்

மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம்

புது தில்லி லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதி கோவிலில் மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிநாதன் சாஸ்திரி தலைமையில், வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ஜபம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள சிவபரிவாரங்களுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !