நொய்டாவில் மஞ்சப்ரா மோகன் பாகவதர் பஜனை நிகழ்ச்சி
நொய்டாவில் மஞ்சப்ரா மோகன் பாகவதர் பஜனை நிகழ்ச்சிநொய்டா சங்கர மடம், ஸ்ரீ மஞ்சப்ரா மோகன் பாகவதர் மற்றும் குழுவினரின் ஸ்ரீ ஐயப்பன் பஜனைகள் ஏற்பாடு செய்திருந்தனர். வேத மந்திர கோஷங்களுக்கு மத்தியில், அன்றைய நிகழ்வு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. படி பாட்டு, தொடர்ந்து மகா பிரசாதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு சுவாமி படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கடுமையான குளிர் காலம் மற்றும் காற்றின் தரம் இரண்டையும் தொந்தரவு செய்யாமல் பக்தர்கள், நொய்டாவில் இருந்து மட்டுமின்றி, அண்டை இடங்களிலிருந்தும் அதிக அளவில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது