மேலும் செய்திகள்
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மங்களூரு
25-Sep-2025
அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் கோவாவில் கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை. 1961க்கு முன் வரை போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்த கோவாவில் பாகா, கண்டோலிம், பாலோலெம் என 21 கடற்கரைகளின் பெயர்கள் நீண்டு செல்லும். பார்க்கும் இடமெல்லாம் ஈர்க்கும் கடற்கரைகள், பிள்ளையைப் போல துள்ளியோட வைத்து மகிழ்ச்சியை கையில் அள்ளித்தரும். கடற்கரைகளின் நீர் விளையாட்டுகள், இந்திய, போர்ச்சுக்கீசிய கலாச்சார செறிவு மிகுந்த கட்டடங்கள், போர்ச்சுக்கீசியர் காலத்திய பாரம்பரிய சர்ச், கோட்டை, ஆன்மிகத்திற்கு கோயில்கள் என சுற்றுவதற்கு ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற சர்ச், சிதிலமடைந்த சர்ச், அகோடா கோட்டை ஆகியவை பழைய கோவாவின் கலாசாரச் செழுமையை பறைசாற்றுகின்றன. பரந்த புல்வெளியைத் தாண்டி அகோடா கோட்டைக்குள் நுழையும் போதே கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ள அகழியின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பிரமாண்ட கோட்டையின் மேல்தளத்தில் இருந்து தென்னை மரக்கூட்டங்களின் அழகையும் ஆவேசமான அலையின் வீச்சையும் ரசிக்கலாம்.
செல்லும் இடமெல்லாம் பஜார்களில் கடைகள் களை கட்டுகின்றன. குறிப்பாக தென்னை மரங்களை குறிக்கும் வகையில் ஆடைகளில் தென்னை மரங்கள் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன. ஹேண்ட் பேக், பல்வேறு வண்ணங்களில் உள்ள கற்களை கம்பியில் கட்டி அழகிய பிரேஸ்லெட், நெக்லஸ், கம்மலாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இளையோர்களாக சுற்ற வேண்டுமெனில் காரை வாடகைக்கு எடுக்க வேண்டியதில்லை. திரும்பும் திசையெல்லாம் 50க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் வாடகை சைக்கிளைப் போல நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோலை நிரப்பினால் கோவாவின் சந்து, பொந்துகளை இஷ்டம் போல் சுற்றி வரலாம்.
25-Sep-2025