உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அபாரமான ஆட்டம் | sports | thirupur

அபாரமான ஆட்டம் | sports | thirupur

அபாரமான ஆட்டம் / sports / thirupur திருப்பூர் தெற்கு குறுமைய இறகுப்பந்து போட்டி தாராபுரம் ரோடு மோகன்ஸ் பேட்மின்ட்டன் அகாடமியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தனர். போட்டியை பிரன்ட்லைன் பள்ளி இணைச் செயலர் வைஷ்ணவி நந்தன், மோகன்ஸ் அகாடமி நிர்வாகிகள் கார்த்திகேயன், ஷியாம் ஆகியோர் துவக்கி வைத்தனர். பதினான்கு வயது தனிநபர் பிரிவில் பிரண்ட்லைன் அகாடமி அணி முதலிடம் பெற்றது. காந்தி வித்யாலயா இரண்டாமிடம் பெற்றது. 17 மற்றும் 19 வயது இரு பிரிவிலும் பிரண்ட்லைன் முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவில் செயிண்ட் ஜோசப் மெட்ரிக். 19 வயது பிரிவில் விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம் பெற்றது. இரட்டையர் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் அணி முதலிடம் பெற்றது. 14 வயது பிரிவில் டி.என்.எஸ்.எஸ். காந்தி வித்யாலயா, 17 மற்றும் 19 வயது பிரிவில் முறையே செயிண்ட் ஜோசப் மெட்ரிக், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணிகள் இரண்டாமிடம் பெற்றன. தனிநபர் 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் முதலிடம் பெற்றது. 14 வயது பிரிவில் ரோட்டரி மெட்ரிக் 17 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் மெட்ரிக், 19 வயது பிரிவில், செயிண்ட் ஜோசப் மெட்ரிக் அணிகள் இரண்டாமிடம் பெற்றது. இரட்டையர் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் முதலிடம் பெற்றது. கிட்ஸ் கிளப் மெட்ரிக் இரண்டாமிடம் பெற்றது. முதலிபாளையம் நிப்டீ கல்லுாரியில் தெற்கு குறுமைய 14 வயது மாணவர் பிரிவின் கால்பந்து போட்டி நடந்தது. எஸ்.பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகோரம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் போட்டியில் கே.செட்டிபாயைம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணி - கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. இதில் 1 -0 என்ற கோல்கணக்கில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கண்காணிப்பு உறுப்பினர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். பதினான்கு வயது பிரிவில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் எட்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. அவற்றில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறின. நடுவர்களாக பாலசுப்ரமணியம், ஜம்பு, ஜெயக்குமார், பாலமுருகன், மோகன சுந்தரம் செயல்பட்டனர்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை