உள்ளூர் செய்திகள்

நரைமுடிக்கு குட்பை

என்ன வயதாகி விட்டது எனக்கு? இப்போதே நரைமுடி தலைகாட்டி விட்டதே என்ற ஏக்கம், இன்றைய காலத்தில், ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இதை மறைக்கவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இயற்கையின் நுகர்வுடன் செல்லாமல், செயற்கை வழியில் ஒவ்வொரு பொருளையும் உபயோகித்து வருவதால், உடலில் சத்து குறைபாட்டில் நரைமுடி ஏற்படுவது, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. உள்ளக் குமுறலுடன், நரைமுடியை மறைக்க, சந்தையில் கிடைக்கும் மலிவான பொருட்களை எல்லாம் தேய்த்து, அதிகமாக்கிக் கொள்கின்றனர். ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால், அதை தவிர்த்து சரி பண்ண முடியும்.* சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.* இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை, 10 சதவீதம் தவிர்க்க முடியும்.* பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இயற்கை வழியில், தலைக்கு அரப்பு, சீகைக்காய் என சேர்த்து, ஷாம்புகளை தவிர்ப்பதன் மூலம் நரைமுடிக்கு குட்பை சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !