துளசி இலையில் உடல் ஆரோக்கியம்
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.காய்ச்சல்: உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் காய்ச்சல் குறைந்துவிடும்.தொண்டைப்புண்: துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.வாய் பிரச்னைகள்: ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி, தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்னைகள் அகலும்.இதய நோய்: தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.சளி, இருமல்: கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று, அதன் சாற்றை விழுங்க வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்து விடும்.நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இன்சுலின் சீராக சுரந்து, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்கும்.சிறுநீரக கற்கள்: துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.