பொய் பேசினால், டென்ஷன் எகிறும்!
சுதா, சென்னை: ஒரு விஷயத்திற்கு, பொய் சொல்ல வேண்டி இருந்தால், அந்தப் பொய்யை மறைக்க, நம்மை அறியாமல், நமக்கு படபடப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து பொய் பேசும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இந்த படபடப்பும், மன அழுத்தமும், குற்ற உணர்வும் அதிகரிக்கும். இதனால், உறவுகள் அற்ற நிலை ஏற்படும். எல்லாவற்றையும் விட, ரத்தக் கொதிப்பு ஏற்படும். எனவே, பொய் பேசாதீர்கள்!