உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / இந்த யானையோடு இந்த கொடுமை முடியட்டும்...

இந்த யானையோடு இந்த கொடுமை முடியட்டும்...

ஒரு வாரம் ஆகிறது ஆனாலும் யானை சுப்புலட்சுமியின் இறப்பு தந்த சோகம் குறையவில்லைகாரணம் எந்த கோயில் யானைக்கும் ஏற்படக்கூடாத கொடிய மரணம் இந்த யானைக்கு ஏற்பட்டதுதான்.சிவகெங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலுக்கு கடந்த 71 ஆம் குண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உபயமாக இந்த யானையைக் கொடுத்தார்.சுப்புலட்சுமி என்ற பெயரிட்டு அந்த பெண் யானையை வளர்த்தனர்,சுப்புலட்சுமி கோயிலுக்கு ஒரு பெரிய செல்வம் என்றால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலருக்கு ரொம்பவே செல்லம்.ஆனால் அந்த செல்லத்தை கோயில் நிர்வாகம் செல்லமாக வளர்த்தாக தெரியவில்லை.ஒவ்வொரு கோயிலிலும் தங்கள் யானைக்கு நீச்சல் குளம்,ஷவர் குளியல், சொகுசு கட்டிடம் என்று கட்டிக் கொடுத்து பராமரிக்கும் நிலையில் சுப்புலட்சுமி கோவில் வாசலில் ஒரு தகர கொட்டகையில்தான் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.சாதாரண கட்டடமே இந்த வெயிலுக்கு சூடாக இருக்கும் நிலையில் கந்தக பூமியான குன்றக்குடியில் ஒரு தகர கொட்டகையின் கீழ் இருப்பது என்பது எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும், வாய் இல்லாத ஜீவன் யாரிடம் போய் முறையிடும்.பெரிய மனது பண்ணி 53 வயதான சுப்புலட்சமிக்கு தகர கொட்டகையின் சூட்டை குறைப்பதற்காக சமீபத்தில்தான் ஒலைத் தட்டியை வேய்ந்துள்ளனர், ஆனால் ஓலைத்தட்டியை வேய்ந்த அறிவுஜீவிகள் தட்டியை தகர கொட்டகைக்குள் மேல் போடாமல் தகர கொட்டகைக்குள்ளாக வேய்ந்துள்ளனர்.இதுதான் யானையின் சாவுக்கு அடித்தளமிட்டுள்ளது.செப் 11 ஆம் தேதி இரவு யானையை தனியாக விட்டுவிட்டு பாகனும் உதவியாளரும் வெளியே சென்றுவிட்டனர்.தகர கொட்டகைக்குள் இருந்த தட்டியில் எப்படியோ பிடித்த தீ யானையின் மீது பரவியது.சங்கிலியால் கட்டி போடப்பட்டிருந்த யானை போராடி சங்கிலியை அறுத்துக் கொண்டு கொட்டகையைவிட்டு வெளியே வந்தது,ஆனால் அதற்குள் யானையின் பெரும்பாலான உடல்பகுதி வெந்துபோயிருந்தது.வேதனையையும் வெப்பத்தையும் தாங்கமுடியாமல் அபயம் தேடி ஒடிய யானையை அதன்பிறகு சமாதானப்படுத்தி கோயில் வளாகத்திற்கு மீண்டும் கொண்டுவந்தனர்.யானையை பரிசோதித்த டாக்டர்கள் 24 மணி நேர அவகாசத்திற்கு பிறகே எதுவும் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர் ஆனால் அவ்வளவு அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தனது துதிக்கையை துாக்கி ஆசீர்வாதிப்பது போல காட்டிவிட்டு கிழே விழுந்து இறந்தது.விடிந்ததும் ஊரே கூடி அழுதது மலர் மாலைகளால் யானைக்கு அஞ்சலி செலுத்தியதுயானை வயதாகி இறக்கலாம் நோயுற்று இறக்கலாம் ஆனால் இப்படி ஒரு விபத்தில் இறக்கலாமா?இதற்கு நாமே காரணமாக இருக்காலமா?நமது பட்ஜெட்டில் யானை வளர்க்கமுடியுமா? அதை நல்லபடியாக பராமரிக் முடியுமா? என்று யோசிக்கவேண்டும் முடியாது என்றால் முதலிலேயே சொல்லிவிடலாம் யானை அதுபாட்டுக்கு தன் குடும்பம் குழந்தைகளுடன் தனக்கான இருப்பிடத்தில் சுதந்திரமாக சங்கிலி தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.இது போன்ற சம்பவம் நிகழ்வது இந்த சுப்புலட்சுமி யானையோடு நிற்கட்டும் என்பதுதான் பக்தர்களின் ஆதங்கம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chandramouli, M.S.
செப் 25, 2024 15:41

சமீபத்தில்தான் இக்கோவிலுக்கு சென்று இந்த யானையிடம் ஆசிர்வாதம் பெற்றோம். இச்செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். சட்டப்படி உரியவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Kampala Prassanna
செப் 20, 2024 18:09

மோசமான கோவில் மேனேஜ்மெண்ட்


Kampala Prassanna
செப் 20, 2024 18:03

கோவில் நிர்வாகம் ஜெயிலுக்கு போகணும்


Barakat Ali
செப் 20, 2024 17:06

காரணம் பொறுப்பின்மை .......... கோவில்களில் இருந்து அரசுக்குத் தேவை வருமானம் மட்டுமே ..........


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 10:09

எந்த கோர்ட் இதனை தானாக எடுத்து பதிவு செய்கிறதென்று பாப்போம் ..... ஹிந்துத்வா பேசும் பாஜக என்ன செய்கிறதென்றும் பார்ப்போம் .... ப்ளூகிராஸ் என்ன செய்யப்போகிறது என்றும் பார்ப்போம் .... .


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 08:07

கொடூரமான நிகழ்வு தான். காப்பாற்றாமல் அந்த குன்றக்குடி குமரன் எங்கே போய் விட்டான்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 10:07

ஏகனுக்கு இணையாக குமரனை வைக்கலாமா ????


Krish
செப் 19, 2024 21:50

வேதனை.... இந்த மோசமான உலகத்தில் ஏன் பிறந்தோம்...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 19, 2024 17:15

சுப்புலட்சுமி இறப்புக்கு காரணமானவர்கள் அனைவருக்கும் ஆண்டவன் தகுந்த தண்டனை வழங்கி சுப்புலட்சுமிக்கு நியாயம் கிடைக்க செய்ய இறைவனின் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை