அசத்துவாரா சதீஷ்
தாஷ்கன்ட்டில் நடந்த சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் இடம் கிடைத்தது. இதன் தகுதிப் போட்டியின் 77 கிலோ பிரிவில் சதீஷ் குமார் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இரண்டாவது தமிழக வீரரானார். இதற்கு முன், டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல் இரண்டு முறை (2008, 2012) ஒலிம்பிக்கில் விளையாடி இருந்தார். காமன்வெல்த் போட்டியில் (2014, கிளாஸ்கோ) தங்கம் வென்ற சதீஷ் குமார் ஒலிம்பிக்கிலும் அசத்த வாய்ப்பு உள்ளது.