மின்னணு கழிவுப் பொருட்கள்: இந்தியாவுக்கு 5ஆவது இடம்
உலகில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுப் பொருட்களைத் தருவதில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்தியா 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில், ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுப் பொருட்கள் சேகரம் ஆகின்றன. இதில், தொலைத் தொடர்பு சாதனங்களின் பங்கு 12 சதவீதமாக உள்ளது. நாட்டில், 100 கோடிக்கும் அதிகமாக மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில், ஆண்டுக்கு 25 சதவீதம் பயன்படுத்தப்படாமல் கழிவுகளாக மாறுகின்றன.