நிறைவேறியது ஜி.எஸ்.டி. மசோதா!
கடந்த எட்டு ஆண்டுகளாக விவாதத்தில் இருந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் 03.08.16 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதனால், ஒரு முனை வரி விதிப்புத் திட்டமான ஜி.எஸ்.டி. (Goods and Services Tax) வரித் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றத்தை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.