உள்ளூர் செய்திகள்

நல்லுணவை உண்ணும் முறை

'ஆசாரக்கோவை' எனும் நூல், உணவு உண்ணும் முறையையும், உண்ணக்கூடாத முறையையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது. அது இன்றைக்கும் பொருந்துகிறது.உண்ணும் முறை* குளித்து வாயை சுத்தம் செய்த பின்னர் உண்ண வேண்டும்.* உண்ணும்போது, கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.* தூங்காமல், அசையாமல் சம்மணமிட்டு அமர்ந்து, சிந்தாமல் உண்ண வேண்டும்.* விருந்தினர், மூத்தவர்கள், பசுக்கள், பறவைகள், பிள்ளைகளுக்குத் தந்தபின் உண்ண வேண்டும்.* இனிப்பை முதலிலும், கசப்பைக் கடைசியிலும், மற்றசுவை உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.உண்ணக்கூடாத முறைகள்* படுத்தபடி உணவை உண்ணக் கூடாது.* நின்ற வண்ணம் உண்ணுதல் கூடாது.* மிகுதியாகச் சாப்பிடக் கூடாது.* கட்டிலின் மேல் உட்கார்ந்து உண்ணக் கூடாது.* கொறித்தவண்ணம் சாப்பிடக் கூடாது.உணவை உண்டபின், வாயில் நீர் ஊற்றி, நன்கு கொப்பளித்து, வெளியில் உமிழ வேண்டும். மூன்று முறை இவ்வாறு செய்தல் நலம். நன்கு ஊன்றிக் கவனித்தால், இவற்றின் பின்னால் பல அறிவியல் செய்திகள் அடங்கியுள்ளன. இவற்றை நன்கு படித்து, சிந்தித்து வாழ்வில் பின்பற்றினால் நலம் கூடும்.- முனைவர் க. அன்பழகன்நினைவிற்கு1. உண்ணும்போது எந்த திசை பார்த்து உண்ண வேண்டும்?2. உழவர்களுக்கு உரிய சொல் எது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !