உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது

இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 8-ஆம் தேதி (இன்று) தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நாளில் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது ஓமன் கடற்கரை நோக்கிச் செல்லும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருந்தாலும், 'ரெட் அலர்ட்' பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, இந்திய வானிலை மையம் அடுத்த 45 நாட்களுக்கு தமிழகம், கேரளம், இலட்சத்தீவுகள் போன்ற இடங்களில் இடியுடன் மழை தொடர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !