மஸ்கட் தேசிய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கில் தமிழக பேராசிரியர்
மஸ்கட் : மஸ்கட் தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஓமன் உள்ளிட்ட சர்வதேச கல்வி நிறுவன பேராசிரியர்கள் முக்கிய உரை நிகழ்த்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை பேராசிரியருமான முனைவர் சித்திரை பொன் செல்வன் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் காலநிலை பாதிப்பு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரித்தார். இந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா