உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம்

இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம்

சென்னை : 'இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் . இந்தியா எனது உத்வேகம், எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு' என இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான் கூறியுள்ளார்

பிரபல இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , ' கடந்த எட்டு ஆண்டுகளாக , ஹிந்தி சினிமாவில் இருந்து எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன . சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது . இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம் . படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர் . இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்' எனவும் தெரிவித்து இருந்தார் . இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது . நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களே ஏ . ஆர் . ரஹ்மானை விமர்சிக்க துவங்கினர்

இந்நிலையில் சர்ச்சையான தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்து ஏ . ஆர் . ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் . அதில் அவர் கூறியதாவது : ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும் , கொண்டாடுவதற்கும் , கவுரவிப்பதற்கும் எப்போதும் எனது வழியாக , இசை இருந்து வருகிறது . இந்தியா எனது உத்வேகம் . எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு . சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன் . ஆனால் , எப்போதும் இசையின் மூலம் கவுரவித்தல் மற்றும் சேவை செய்வதே எனது நோக்கம் ஆகும்

நான் ஒரு போதும் , யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை . எனது நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன் . இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் . இது , கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் மற்றும் பன்முக கலாசார குரல்களை கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது . இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்ற உதவுகிறது . இந்த நாட்டிற்கு நான் கடமைப்பட்டு இருப்பேன்

கடந்த காலத்தை மதிக்கும் , நிகழ்காலத்தைக் கொண்டாடும் மற்றும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு உறுதியளிக்கிறேன் . ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் பாரத்.

இவ்வாறு அந்த வீடியோவில் ஏ . ஆர் . ரஹ்மான் கூறியுள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !