காரமடை அரங்கநாதர் கோவில் இன்று தேர்த்திருவிழா கொடியேற்றம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்பு, கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, 14ம் தேதி வரை வேட்டையும் கருட சேவையும், 15ல் பெட்டதம்மன் அழைப்பும், 16ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 17ம் தேதி காலை,5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 18ம் தேதி பரிவேட்டையும், 19ல் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. தேர் திருவிழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.