உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் பூஜை

கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் பூஜை

பெருமாநல்லுார்: கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர்களுக்கு முகூர்த்தக்கால் நடும் பூஜைகள் நேற்று நடைபெற்றன.


திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, நேற்று மாலை உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் மற்றும் விநாயகர் தேருக்கு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில், கோவில் அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், வரும், 25ம் தேதி இரவு கொடியேற்றம், 31ம் தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல், அன்று மாலை தேரோட்டம் ஆகியன நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !