ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தியம் பகவானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தது.
பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:30 மணிக்கு நந்தியம், மூலவருக்கும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், சாலை அகரத்தில் உள்ள அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும், திரு.வி.க., வீதி கைலாசநாதர் கோவில் உட்பட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.