ஐப்பசி முதல் நாள் தீர்த்தவாரி: துலா உற்சவம் கோலாகலம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத முதல் நாள் தீர்த்தவா ரியுடன், துலா உற்சவ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதிதேவி சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண் டு சுவாமியை பூஜித்த இடம் பிரம்மவனம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை. இங்கு சிவபெருமானும், பார்வதிதேவியும் மயில் உரு கொண்டு ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீ ர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரிரி கூறியது. அதை க்கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழ ம யில் உரு நீங்கி தேவி சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி எ ன்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் க வுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநா தர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் என்பது ஐதீகம். இதனை நினைவுக்கூறும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூ ரநாதர் கோவில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி காவிரி துலாக்கட் டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந் து வருகிறது. ஐப்பசி 1 ம் தேதி முதல் தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொட ங்கி அமாவாசை தீர்த்தவாரி, ஐப்பசி 30 ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர் த்தவாரி) நடப்பது வழக்கம். அதேபோல் இவ்விழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அபயா ம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், விசா லாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வாதானேஸ்வரர் சுவா மிகள் பஞ்ச மூர்த்திகளுடன் காவேரி துலாக்கட்டத்தில் எழுந்தருளினர். அங்கு கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியகுருக்கல் தலைமையிலான சிவாச்சா ரியார்கள் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்ய தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி தீர்த்தம் கொடுத்த போது திரளான பக்த ர்கள் காவிரியில் புனித நீராடினர்.