உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, ராகு கால பூஜை சிறப்பாக நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் துர்க்கை அம்மன் சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, ராகு காலமான, 3:00 மணி முதல், 4.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜையின் போது பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலிலும், துர்க்கை அம்மனுக்கு பெண்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !