செஞ்சி கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சாமி வீதியுலாவும் நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். சாமி கோவில் உலா நடந்தது. மகா தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் செல்வம் பூஜைகளை செய்தார். மேலச்சேரி பிரகன்னநாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.