தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தர்மபுரி: பங்குனி மாத, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தட்சணகாசி காலபைரவர் தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி மாவட்டம், தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு, சிறப்பு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபி ?ஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு, தங்கக்கவச அலங்காரத்தில் தட்சணகாசி காலபைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் தட்சணகாசி காலபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்தார். நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.