ஊட்டி அருகே முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2459 days ago
ஊட்டி:ஊட்டி அருகே கீழ் அப்புகோடில் ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை நடந்து வருகிறது. நடப்பு மாதம் கிருத்திகை பூஜையையொட்டி, முருக பெருமானுக்கு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.