ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2413 days ago
பேரையூர், பேரையூர் அருகே சாப்டூர் ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா மூன்று நாட்களாக நடந்தன. பூக்குழி, பறவைக்காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடகரைப்பட்டி அழகர்சாமி கோயிலில் இருந்து அம்மன் கரகம் கொண்டு வரப்பட்டது.